states

பாஜக வழக்கறிஞருக்கு ஜார்க்கண்ட் அரசு பதிலடி வங்கதேசம், ரோஹிங்கியாஅகதிகளை தடாலடியாக நாடு கடத்த முடியாது!

புதுதில்லி, மே 23 - சட்ட விரோதமாக குடியேறிகள் தொடர்பான விவகாரத்தில், வெளி நாட்டினருக்கான சட்ட நடைமுறை களின் அடிப்படையிலே தீா்வுகாணப் பட வேண்டும் என்றும் ஜார்க்கண்ட் மாநில அரசு கூறியுள்ளது. சட்ட விரோதமாக குடியேறி யவா்களை, நாடு கடத்த உத்தரவிடக் கோரி, பாஜகவைச் சோ்ந்த மூத்த  வழக்கறிஞரான அஸ்வினி உபாத் யாய பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். “நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களை அடை யாளம் கண்டு, சிறைப்பிடித்து நாடு கடத்துவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் வலி யுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகை யிலேயே ஜார்க்கண்ட் அரசு மேற் கண்டவாறு கூறியுள்ளது.  ஜார்க்கண்ட் மாநில காவல்துறை சிறப்புப் பிரிவு ஐ.ஜி. பிரசாந்த் குமார்,  இதுதொடர்பர்க 15 பக்க பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளார்.  அதில், “சட்ட விரோதமாக குடி யேறுபவா்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்புக் காவல் மையங்கள் மற்றும் முகாம்கள் அமைத்து அவா்களை அதில் தங்க வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. ஜார்க்கண்ட் அரசும் ஹசாரிபாக் மாவட்டத்தில் இதுபோன்ற தடுப்புக் காவல் மையத்தை அமைத்துள்ளது.  குடியுரிமை விவகாரத்தைப் பொறுத்தவரை குடியுரிமைச் சட்டம் மற்றும் வெளிநாட்டினா்களுக்கான சட்ட நடைமுறைகளின் அடிப்படை யிலே தீா்மானிக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்தின் பயன்பாட்டிற்குப் பிறகுதான் நாடு கடத்தல், இடமாற்றம் திருப்பி அனுப்புதல் அல்லது  மறு வாழ்வு போன்றவை நடைபெறமுடியும்.  பொது நலன் வழக்குகளின் நோக்கம் சிறுபான்மையினர் அல்லது  பின்தங்கிய குழுக்கள் மற்றும் தனி நபர்களின் காரணத்திற்கு உதவுவதற் காக மனித உரிமைகள் மற்றும் சமத் துவத்தை முன்னேற்றுவதற்கு அல் லது பரந்த பொது அக்கறையின் பிரச்ச னைகளை எழுப்புவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவித பாதிப்பும் ஏற்படாத சூழ லில், தவறான கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு மிகுந்த எச்ச ரிக்கை தேவைப்படுவது போன்று  பொதுநல மனுவில்  மனுதாரா் குறிப் பிட்டுள்ளார். எனவே, பொதுநல மனு வை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று ஐ.ஜி. பிரசாந்த் குமார் குறிப்பிட்டுள்ளார்.