states

கழிப்பறையை நாவால் சுத்தம் செய்ய வைத்து பழங்குடி பெண்ணுக்கு கொடூர சித்ரவதை!

ராஞ்சி, ஆக.31- வீட்டு வேலைக்கு வந்த பழங்குடி பெண்ணை, கழிப்பறையை நாக் கால் சுத்தம் செய்ய வைத்தும், உடல் முழுவதும் சூடு போட்டும், பற்களை  உடைத்தும் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கிய பாஜக பெண் தலை வர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அசோக் நகரில் வசித்து வருபவர் சீமா பத்ரா. முன்னாள் ஐஏஎஸ் அதி காரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவியான இவர், பாஜக மூத்த  பெண் தலைவர் ஆவார். அக்கட்சி யின் தேசிய செயற்குழு உறுப்பின ராகவும் இருந்து வருகிறார். இவர், ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்  குடி வகுப்புப் பெண்ணான சுனிதா  (29) என்பவரை கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு தனது வீட்டு வேலைக் காக அழைத்து வந்துள்ளார். பின்னர், தில்லியில் வசிக்கும் தங்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்  துள்ளார். ஒருகட்டத்தில், வத்சலா  தில்லியில் இருந்து மாற்றப்பட்ட தும், சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு வந்து, சீமா பத்ராவின் வீட்டிலேயே பணிகளைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சுனிதாவை பாஜக தலைவர் சீமா கடந்த 6 ஆண்டுகளுக்காக கொடூரச் சித்ர வதைகளுக்கு உள்ளாக்கி வருவ தாக கிடைத்த தகவலின் பேரில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி சீமா பத்ரா வின் ராஞ்சியிலுள்ள அசோக் நகர்  வீட்டிற்குச் சென்ற காவல்துறையி னர், அறைக்கதவை உடைத்து,  அங்கு குற்றுயிரும் குலையுயிருமா கக் கிடந்த சுனிதாவை மீட்டுள்ளனர்.

தனது தாயார் சீமா பத்ரா, பழங்  குடிப் பெண் சுனிதாவை கொடூர மான சித்ரவதைக்கு உள்ளாக்கி,   தனி அறையில் அடைத்து வைத்துள் ளார் என்று சீமா பத்ராவின் மகன்  ஆயுஷ்மான், ஜார்க்கண்ட் அரசாங்  கத்தில் பணியாளர் துறை அதிகாரி யாக இருக்கும் தனது நண்பர்  விவேக் பாஸ்கியிடம் தெரிவித்துள் ளார். அவர் மூலமாக விஷயம்  காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண் சுனிதா, காவல்  துறையிடம் வாக்குமூலம் அளித் துள்ளார். அதில், கடந்த 6 ஆண்டு களாக, பாஜக தலைவர் சீமா  பத்ராவின் கொடூரமான சித்ர வதைக்கு தான் ஆளானது, சீமா  பத்ராவால், தவா மற்றும் கம்பியால் தான் பலமுறை தாக்கப்பட்டது; அதில், பற்கள் உடைந்து போனது; பழுக்கக் காய்ச்சிய பாத்திரங்களால் சூடு வைக்கப்பட்டது, தரையில் இருக்கும் சிறுநீரை நக்க வைத்தும், கழிப்பறையை நாக்கால் சுத்தம்  செய்ய வைக்கப்பட்டது; உணவு,  தண்ணீர் கூட கொடுக்காமல் அறை யில் அடைத்து கொடுமைப்படுத்திய போன்ற துன்புறுத்தல்களை விவ ரித்துள்ளார். 

தான் செய்த தவறுகள் என்ன வென்று தனக்குத் தெரியாத நிலை யிலேயே பாஜக தலைவர் சீமா பத்ரா தன்னை சொல்லொணா சித்ர வதைக்கு ஆளாக்கியதாகவும், சீமா  பத்ராவின் மகன் ஆயுஷ்மான் பத்ரா  தனக்கு உதவி செய்ததால் மட்டுமே தான் இப்போது உயிருடன் இருப்ப தாகவும் சுனிதா கண்ணீர் விட்டுள் ளார். சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164ன் கீழ் நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சுனிதாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த ராஞ்சி நகரின் அர்கோரா காவல்துறையினர், பாஜக தலை வர் சீமா பத்ரா மீது பட்டியல் வகுப்பி னர் - பழங்குடியினர் வன்கொடு மைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிந்து அவரைக் கைது  செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், “தன்மீது சுமத்  தப்பட்டிருப்பது பொய்யான குற்  றச்சாட்டு. அரசியல் உள்நோக்கத்து டன் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் நான் சிக்கியுள்ளேன்” என்று சீமா பத்ரா தப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீமா பத்ராவை பாஜக தற்போது கட்சியிலிருந்து இடைநீக்கம் செய் துள்ளது. முன்னதாக சுனிதாவின் சகோ தரி மற்றும் மைத்துனருக்கு அவரின் நிலை பற்றித் தெரிவிக்கப்பட்டதாக வும், ஆனால், அவர்கள் அவரை அழைத்துச் செல்ல மறுத்து விட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, உடல் நிலை சரி யான பிறகு, தான் படிக்க விரும்பு வதாக பழங்குடிப் பெண் சுனிதா தெரிவித்துள்ளார்.