மதுரை,ஜூலை 14- எரிபொருள் விலை உயர்வு, கார்ப்ப ரேட்களுக்கு ஆதரவான நடவடிக்கை களால் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அதி கரித்துள்ளது. இந்த கொந்தளிப்பை ,மக்களின் கோபத்தை நாடாளுமன்றத்தில் எதி ரொலிக்காமல் முடக்க மோடி அரசு விசித்திர மான நடவடிக்கையை மேற்கொண்டுள் ளது. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் தொடர்பான பட்டியலை மக்களவைச் செயலாளர் வெளியிட்டுள் ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் - 2022 வெளியிடப் பட்டுள்ளது. அந்த சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது. சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல.இந்த சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. உங்கள் பெயர்களே போதுமானது என்று விமர்சித்துள்ளார்.