states

லக்னோ அணியின் உரிமையாளர் புலம்பல்

15-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது பாதிக்கட்டத்தை கடந்துள்ள நிலையில், எப்போதும் இல்லாத வகையில் நடப்பு சீசனில் ஐபிஎல் தந்தோர் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  தொலைக்காட்சித் தரவரிசை மற்றும் கொரோனா பரவல் என இரண்டு விமர்சனங்கள் கிரிக்கெட்  உலகத்தை கவனிக்க வைத்திருந்த  நிலையில், லக்னோ அணி உரிமை யாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோ தரரும் பிரபல தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா ஐபிஎல் போட்டியின் பெரும்பாலான ஆட்டங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன என கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ் கோயங்கா கூறியதாவது, “ரசிகர்களுக்குப் பிடித்த அணிகளான மும்பையும், சென்னையும் மோச மாக விளையாடி வருகின்றன.  கோலி,  தோனி,  ரோஹித் சர்மா ஆகியோர்  இன்னும் அதிக ரன்களை எடுக்கவில்லை. எல்லா  ஆட்டங்களும் மும்பையில் நடை பெறுகின்றன. இதனால் ரசிகர்களின் பங்களிப்பு குறைந்து விடுகிறது.  2 வருடங்களாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்த மக்கள் தற்போது வெளியே செல்ல ஆர்வமாக உள்ளார்கள். ஏராளமான ஆட்டங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன “என கூறியுள்ளார்.

விமர்சனம் ஏன்?

தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்து வரும் ஐபிஎல் தொடரை பற்றி  ஹர்ஷ் கோயங்கா விமர்சிக்க காரணம் தொலைக்காட்சித் தரவரிசை பற்றி தான். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு சீசனில் தொலைக்காட்சித் தரவரிசை படுமோசமாக உள்ளது.  இதனால் விளம்பர வருவாய் மற்றும் இதர வருவாயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷ் கோயங்காவின் இந்த கருத்து மிக முக்கிய கருத்தாக இருப்பதால் இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.