states

10 மாதங்களில் இல்லாத பலத்த சரிவை சந்திக்கும் இந்திய பங்குச் சந்தைகள்!

மும்பை, ஜூன் 17 - இந்திய பங்கு சந்தைகள் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்திலேயே இருந்து வந்தன. குறிப்பாக மும்பை  பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ்  ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. ஆனால், உக்ரைன் - ரஷ்ய போர், சர்வதேச சந்தையில் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற பொருளாதார தன்மை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம்  ஆகியவற்றால் இந்தியப் பங்குச் சந்தை கள் தற்போது வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.  அந்த வகையில், ஜூன் 13 முதல் 17 வரையிலான வர்த்தக வாரத்தின் 5 நாட் களுமே மும்பைப் பங்குச் சந்தைக் குறி யீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி ஆகிய இரண்டுமே சரிவில் முடிந்துள்ளன.  வர்த்தக வாரத்தின் முதல் நாளில் 1500 புள்ளிகள், செவ்வாய், புதன்கிழமை களில் 153 புள்ளிகள், வியாழக்கிழமை யன்று 1045.60 புள்ளிகள் என்று தொடர்ந்த  சென்செக்ஸ் வீழ்ச்சி, வெள்ளிக்கிழமை யன்றும் 135.37 புள்ளிகள் சரிவில் முடிந்தது.

அதாவது மும்பை பங்குச் சந்தையானது, ஒரே வாரத்தில் 3824.49  புள்ளிகளை இழந்தது. இது ஒட்டுமொத்த மாக 6.91 சதவிகித சரிவு ஆகும்.  இதனால், இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 10 மாதங்களில் இல்லாத  அளவிற்கு பலத்த சரிவை சந்தித்துள் ளன. பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் 5 நாட்களில் மட்டும் ரூ. 15 லட்சத்து 74 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று மட்டும், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் 3531.15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். சர்வதேச அளவில் நிலவி வரும் அர சியல் பதற்றங்கள், பணவீக்கம் அதி கரிப்பு ஆகியவற்றுடன் அமெரிக்க  பெடரல் வங்கியைத்தொடர்ந்து, பிரிட்டன் மத்திய வங்கியும் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது, இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீட்டின் அளவை அதிகரித்துள்ளதாக தர  மதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக் கின்றன.