states

அரசு அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை, ஏப்.27- தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரி களின் சொத்துகளை  ஆய்வு செய்ய  வேண்டும்  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்த ரவிட்டுள்ளது.  இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’  அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய  வேண்டும். ஆய்வில் கணக்கில் வராத சொத்து களைக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் ஊழல்களை வெளிக்கொண்டுவரும் சோதனை யில் போதிய காவல்துறையினரை காவல்துறைத் தலைவர் ஒதுக்க வேண்டும் என்றும் சொத்து விவ ரங்கள் அதிகாரிகளின் பணி பதிவேட்டில் குறிப்பி டப்பட வேண்டும். முறைகேடுகள் இருப்பது கண்ட றியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.