states

சிறைகளில் நூலகத்திற்கான உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தக் கோரி வழக்கு

மதுரை, டிச. 2-  தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள் கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.  இதுகுறித்து மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் 135 மத்திய சிறைகள், 3 பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 103 துணை சிறைகள், 10  பெண்களுக்கான துணை சிறைகள், இவை தவிர 7 சிறப்பு துணை சிறைகள்உள்ளன.  பெரும்பாலான சிறைகளில் அதற்கான முறையான உள் கட்டமைப்பு வசதிகள்  இல்லை. காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லை.  சிறை கைதிகளுக்கான விதிகளிலும் சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அது அனைத்து கைதி களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என உள்ளது. ஆனால் பெரும்பா லான சிறைகளில் இவை முறையாக நடை முறைப்படுத்தவில்லை.  ஆகவே தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கின் விசாரணை வெள்ளி யன்று நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது நீதிபதிகள் , “பல நேரங்களில் கைதிகளின் உளவியல்  சிக்கல்களுக்கு  தீர்வாக இவை உதவும். சிறைகளில் நூலகங்கள் வைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தமிழக சிறைத் துறையின் கூடுதல் செயலர், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

;