சென்னை, மே 9- தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கான குற்ற ங்கள் அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா தொற்று ஊர டங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழு வதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணை யம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கடந்த 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களின் எண்ணி க்கை அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019-ஆம் ஆண்டில் 1,982 புகார் களும், 2020-ஆம் ஆண்டில் 2,025 புகார்கள், 2021-ஆம் ஆண்டில் 2,421 புகார்களும் பதிவாகி உள் ளன. 2021-ஆம் ஆண்டில் கண வர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமை தொடர்பாக மட்டும் 875 புகார்கள் பதிவாகி உள்ளன. மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர் பாக வழக்குப் பதிவு செய்யப் படும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையும் அதி கரித்துள்ளது. போக்சோவில் 2019-ஆம் ஆண்டு 2,396 வழக்குகளும், 2020- ஆம் ஆண்டு 3,090 வழக்கு களும், 2021-ஆம் ஆண்டு 4,469 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 2021-ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மட்டும் 3,425 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.