states

கொரோனாவால் தீவிர வறுமைக்கு உள்ளானோரில் 79% பேர் இந்தியர்கள்!

புதுதில்லி, அக். 13 - உலக அளவில் தீவிர வறுமை விகி தம் அதிகரித்துள்ளது என்றும், கொரோ னா காலத்தில் தீவிர வறுமைக்கு ஆளா னவர்களில் 79 சதவிகிதம் பேர் இந்தியர் கள் என்றும் உலக வங்கிதெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், “2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகம் முழு வதும் சுமார் 7 கோடியே 10 லட்சம்  மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டிருக்க லாம்” என தெரிவித்துள்ள உலக வங்கி, “இந்த 7 கோடியே 10 லட்சம் மக்களில் கிட்டத்தட்ட 79 சதவிகிதம் ( 5 கோடி 60  லட்சம்) மக்கள் இந்தியாவைச் சேர்ந்த வர்கள்” என குறிப்பிட்டுள்ளது. மேலும், உலகளாவிய தீவிர வறுமை  விகிதம் 2019-இல் 8.4 சதவிகிதமாக இருந் தது, 2020-ஆம் ஆண்டில் 9.3 சதவிகித மாக அதிகரித்து இருப்பதாகவும் உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள் ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தாலும், 2020-இல் உலகளாவிய வறுமையில், சீனாவின் பங்கு குறைவாகவே உள்ள தாகவும் கூறியிருக்கும் உலக வங்கி, சீனா 2020-இல் மிதமான பொருளாதார அதிர்ச்சியை சந்தித்ததாகவும் குறிப்பி ட்டுள்ளது.