states

ஒன்றிய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன!

புதுதில்லி, ஜூலை 21 - ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 9 லட்சத்து 79 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசின் பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரி வித்துள்ளார். இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக ஜிதேந்திர  சிங் பதிலளித்துள்ளார். அதில், “செலவினத் துறையின் வருடாந்திர ஊதிய ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி வரையில் ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் அனு மதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 35 ஆயிரத்து 203. இதில் சுமார் 30 லட்சத்து 55 ஆயிரம் போ் பணியில் உள்ளனா். சுமார் 9 லட்சத்து 79 ஆயிரம் பணியிடங்கள் காலி யாக உள்ளன. பணி ஓய்வு, பதவி உயா்வு,  பணிவிலகல், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலிப் பணியிடங்கள் ஏற்படுகின்றன” என்று ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஒன்றிய அரசில் புதிய பணியிடங் களை உருவாக்குவதும் நியமனம் செய்வதும் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறை யின் பொறுப்பாகும். இது தொடர்ச்சியான நடை முறையாகும்.  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது” என்றும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.