கும்பகோணம்,செப்.10- இந்தியா பெயரே போதுமானது. பாரத் என்ற பெயர் தேவையில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது 85-வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோண த்தில் 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் விவசாயி கள் பாதிப்படைந்து வருகின்றனர். கர்நாடகா அரசு தற்போது தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனை வரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம் . சமூக நீதிதான் எல்லா வற்றிற்கும் சரியான பரிகாரம். வரு கிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சி யின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை காப்பாற்று வதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது உள்ள இந்தியா பெயரே போதும் பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன். தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து இன்னும் மதிப்பெண் போடவில்லை என்று கூறினார்.