states

சுதந்திர தினம் - குடியரசுத் தினத்தைவிட ஜிஎஸ்டி நாள் மிகவும் முக்கியமானதாம்!

சென்னை, ஜூலை 1- சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கிய மானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஒன்றிய, மாநில அரசுகளால் விதிக்கப் பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு  கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரி களை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி  திட்டத்தை ஒன்றிய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ஜிஎஸ்டி 6-ஆவது ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடும் வித மாக, நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் கொண் டாடப்படுகிறது.  இதன்படி, ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி நாள் கொண்டாடப்பட்டது.  இதில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘நாட்டின் சுதந்திர நாள், குடியரசு நாளைவிட, மிக முக்கிய மான நாள் ஜிஎஸ்டி நாள் என கூறினார். மேலும், பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பிறகு மிக முக்கியமான நாளாக 5 ஆவது ஜிஎஸ்டி நாள் பார்க்கப்படுகிறது.  இந்தியா ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி என்று ஒன்றிணைகிறது. ஜிஎஸ்டி  மக்களுக்கு, வியாபாரிகளுக்கு எளிமை யாக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 4  ஆண்டுகளில் ஜிஎஸ்டி லாபம் ரூ.35 கோடி முதல் 1,500 கோடி வரை உயர்ந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா பலமான நாடாக இருக்கும்’’ என ஆளுநர் ரவி கூறினார்.