மேட்டூர், மே 15- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. சனிக்கிழமையன்று காலை வினாடிக்கு 5,554 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து ஞாயிறன்று காலை வினாடிக்கு 7,661 கனஅடியாக அதிகரித்துள் ளது. இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம் 107.78 அடியிலிருந்து 108.14 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.61 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.