- ரூ.2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய நிதித் துறை, சட்டத்துறை செய லாளர்கள் பதிலளிக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது. ரூ.8 லட்சம் வரு வாய் பெறும் இ.டபிள்யு.எஸ் (EWS) பிரிவினர் ஏழை என்றால், இது மற்றவர்களுக்கு பொருந் தாதா என்ற மனு மூலம் வழக்கு தொடரப்பட்டுள் ளது.
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதி யில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 2.7 கிலோ அம்பர் கிரீஸ் (திமிங்கில உமிழ்நீர்) பதுக்கி வைத் திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஓசூர் அருகே கெலமங் கலம் பகுதியில் வயலில் இருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை யை யாருக்கும் தெரியா மல் புதைத்த விவசாயி எல்லப்பாவை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். உயிரிழந்த யானையை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.
- விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் அருணாச் சலப் பிரதேசத்திற்கு எதிராக தொடக்க வீரர் ஜெகதீசனின் (277 - 141 பந்துகள்) இரட்டை சதம் மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்களுடன் உலக சாதனை படைத்துள்ளது. மேலும் 435 ரன்கள் வித்தியாசத்தில் பிரம் மாண்ட வெற்றியையும் ஈட்டியுள்ளது தமிழ்நாடு.
- அர்ஜெண்டினாவுடனான முழுமையான உறவுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் உறுதியளித்துள்ளார். பாரம்பரியமான நட்பு மற்றும் முழுமையான ஒத்துழைப்புக்கு எப்போதுமே வியட்நாம் பெரும் அளவில் முக்கியத்துவம் தந்து வருகிறது என்று அர்ஜெண்டினாவில் இருந்து வந்த குழு ஒன்றை வரவேற்றுப் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வியட்நாமின் ஹனோய் நகருக்கு வந்துள்ள இந்தக் குழு வியட்நாமின் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளது.
- ஈரானின் எச்சரிக்கையை மீறி பாரசீக வளைகுடாப் பகுதிக்கு 100 ஆளில்லாக் கப்பல்களை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வளைகுடாப் பகுதிகளில் கூடுதல் பதற்றங்களை உருவாக்கும் உத்தியாகவே இதை அமெரிக்கா செய்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் ஈரான் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.
- நவீன நாஜி அமைப்புகளில் இணைந்து இயங்கி வரும் பலரை இத்தாலி காவல்துறை கைது செய்துள்ளது. அரசுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்புகள் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்டு இருந்தன என்பது அம்பலமாகியது. அத்தகைய தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட மற்றும் அந்தத் தாக்குதல்களை நடத்திய உறுப்பினர்களை இத்தாலியக் காவல்துறை கைது செய்து, வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது.