states

img

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி காத்திருக்கும் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 17-  கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காக்குறிச்சி ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ஆத்ம நாதன்-கவிதா தம்பதியரின் மகள் காளீஸ்வரி. தலித் வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரியை கடந்த செவ்வாயன்று அதே ஊரைச் சேர்ந்த வீரப்பன் மகன் தர்மராஜ் (28) பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து வடகாடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் கோபமடைந்த தர்மராஜ் மற்றும் அவரைச் சேர்ந்த சுப்பிரமணி யன், சுரேஷ், சரவணன், பாலு உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார், தடுக்க வந்த அண்டை வீட்டார் மீது கொலைவெறி யுடன் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

காத்திருக்கும் போராட்டம்

தாக்குதலில் படுகாயமடைந்த தங்கையா, கிருஷ்ணமூர்த்தி, கவிதா, அமுதா, கலைச்செல்வன், அஜித்குமார் ஆகியோர் தற்பொழுது புதுக்கோட்டை  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினரோ இருவரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  இந்நிலையில், தாக்குதல் தொடுத்த  அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வெள்ளியன்று வடகாடு காவல் நிலையத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், எஸ்.மணிவண்ணன், ஆர்.காமராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, விசிக ஒன்றியச் செய லாளர் செல்வரெத்தினம், மாவட்ட துணைச்செயலாளர் சந்திரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத் திற்கு வந்த மாவட்ட கூடுதல் கண்கா ணிப்பாளர் கீதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இரண்டு தனிப்படை அமைத்து அனை த்துக் குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட தலித்மக்களின் குடி யிருப்புக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, முறையாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய விசார ணை செய்து துறைரீதியான நட வடிக்கை எடுப்பது என உறுதியளிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், அதிகாரிகள் அளித்துள்ள வாக்குறுதியை அடுத்து  நாம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மாவட்ட அளவிலான போராட்டத்தை நடத்துவோம் எனத் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.