https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
சுழற்சி முறையில் ஜி20 அமைப்பின் தலைவர் பொறுப்பு இப்போது பிரேசிலின் கைகளுக்கு சென்றுள்ளது. அப்பொறுப்பை இந்தியாவிட மிருந்து பெற்றுக் கொண்டு பிரேசில் ஜனாதிபதி லூலா அவர்கள் பேசியதைக் கவனியுங்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் இன்னும் பசி, பட்டினியின் பிடியில்தான் இருக்கிறார்கள்; அதே வேளை ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் கைகளில் இந்த உலகின் செல்வமெல்லாம் குவிந்திருக்கிறது; இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்வதற்கு நாங்கள் ஜி20 தலைமைப் பொறுப்பை பயன்படுத்த முயற்சிப்போம் என்று லூலா கூறியிருக்கிறார். அவரிடம் எந்த படாடோபமும் இல்லை. மக்களின் உண்மையான வாழ்நிலை குறித்த கவலைகளும், உலகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய கவலைகளுமே உள்ளன. கவனியுங்கள்!