புதுச்சேரி, ஜூன் 27- புதுவையில் கடந்த மே மாதம் நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்களன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. புதுவை, காரைக் காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 90.90 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 81.97 விழுக்காடு மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 142 மாணவர்கள், 7 ஆயிரத்து 703 மாணவி கள் என மொத்தம் 14 ஆயிரத்து 845 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 153 மாணவர்கள், 7 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் மட்டும் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 451 பேரில் 4 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 15 பேரில் 6 ஆயிரத்து 954 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக் காலில் மட்டும் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய ஆயிரத்து 592 பேரில் ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 787 பேரில் 767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக் காலில் மொத்தம் உள்ள 155 அரசு, தனியார் பள்ளிகளில் 70 விழுக்காடு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் மட்டும் 58 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 12 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவை, காரைக்காலில் மொத்தமுள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் ஒரு பள்ளி மட்டும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. புதுவை, காரைக்காலில் அரசு, தனி யார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்க ளில் இயற்பியல் 17, வேதியியல் 4, உயிரியல் 34, கணிப்பொறி அறிவியல் 24, கணிதம் 17, பொருளியல் 23, வணிகவி யல் 21, கணக்குப்பதிவியல் 43, வணிக கணிதம் 5, கணினி பயன்பாடு 60, விலங்கியல் 2 பேர் என மொத்தம் 250 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.