மதுரை, பிப்.16- மதுரை மாவட்டம், மேலூரில் 2011 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தோ்தலின் போது, வட்டாட்சியரைத் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மு.க. அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வந்ததது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்மன்றத் தோ்தலின் போது, மேலூா் தொகுதிக்குட்பட்ட வெள்ளலூா், அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரா் கோயிலுக்குள் கிராமத் தலைவா்கள், பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தி னார். அப்போது வேறு யாரும் உள்ளே செல்ல முடியாத வகை யில் கோவில் கதவுகள் மூடப்பட்டி ருந்தன. இதுதொடா்பாக அதிமுக வினா் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக கோவிலுக்குள் பணம் பட்டுவாடா செய்யும் பணியில் மு.க.அழகிரி ஈடுபட்டிருப்பதாக அவா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, மேலூா் தொகுதி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான காளிமுத்து, அலுவலா்கள், வல்லடிக்காரா் கோவிலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, வீடியோ பதிவு செய்தனா். இதற்கு மு.க. அழகிரி, அவரது ஆதர வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே,தான் தாக்கப்பட்ட தாக வட்டாட்சியர் எம்.காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயா் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் நான்கு பேர் இறந்து விட்டனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகியிருந்தனர். தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜி.பி.முத்துலட்சுமி, வட்டாட்சியரை தாக்கிய வழக்கின் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 17 பேரையும் விடு தலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.