புதுதில்லி, அக். 16 - வாச்சாத்தி வன்கொடுமை வழக் கில் முதன்மை குற்றவாளிகளாக அறி விக்கப்பட்ட ஐ.எப்.எஸ். அதிகாரிகள் எல். நாதன், பாலாஜி ஆகியோரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடி யாது என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. மேலும், குற்றவாளியாக அறி விக்கப்பட்ட இந்த வனத்துறை அதி காரிகள் இருவரும், 6 வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாச்சாத்தி வழக்கில் உயர் நீதி மன்றத்திலும், தங்களுக்கு எதிரான தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதால், குற்ற வாளிகள் தற்போது உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் முதன்மை குற்றவாளிகளாக அறி விக்கப்பட்ட ஐ.எப்.எஸ் அதிகாரிகள் எல்.நாதன் மற்றும் பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தங்களின் தண்டனையை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் அமர்வில் திங்கள்கிழ மை விசாரணைக்கு வந்தன. அப்போது, “வாச்சாத்தி வழக்கில், வேண்டுமென்றே சாதி ரீதியான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழிவாங்கும் விதமாக எல். நாதன் இந்த வழக்கில் சிக்க வைக்கப் பட்டுள்ளார். அதனால் அவரது தண்ட னையை நிறுத்தி வைப்பதுடன், வழக்கி லிருந்து அவரை விடுவிக்க வேண்டும்” என எல். நாதன் சார்பில் வழக்கறி ஞர் நாகமுத்து வாதங்களை வைத்தார். பாலாஜி தரப்பில் குரு கிருஷ்ண குமார் வாதாடினார். அப்போது, வழக்கை விசாரித்த நீதி பதிகள், இந்த வழக்கில் தண்டனை யை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட எந்த நிவாரணத்தையும், மனுதாரர்கள் இரு வருக்கும் வழங்க முடியாது என்று அவர்களின் கோரிக்கையை நிராக ரித்தனர். அத்துடன், எல். நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடுத்த 6 வாரங்களுக்குள் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். 86 வயதாகும் ஹரி கிருஷ்ணன் மட்டும் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.