முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கார் ஓட்டுநரான கனக ராஜ், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தேடி வந்த நிலையில் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையில் கனக ராஜின் அண்ணன் தனபாலையும் போலீ சார் கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த தனபால், நிலம் வாங்கி கொடுப்ப தில் மோசடியில் ஈடுபட்டதாக மேச்சேரி போலீசார் அவரை கைது செய்து சிறை யில் அடைத்திருந்தனர். அப்போது அவ ருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய பல தகவல்களை தெரிவிக்க இருப்ப தாக கூறினார். இதனால், கொடநாடு கொலை வழக்கை விசாரித்து வரும் போலீ சார் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.