states

img

நாங்குநேரி சம்பவம்: சாதிவெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.14- நாங்குநேரியில் பட்டியலின மாணவர் சின்னதுரை, அவருடைய சகோதரி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவருடை சகோதரி மீது சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண ஏழை மாணவராக பட்டியலின மாணவரான சின்னதுரை, பள்ளியில் சிறந்த மாணவராக திகழ்ந்த காரணத்திற்காக, கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. கிராமங்களில் பதிந்திருக்கிற சாதி வன்மம் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. இது வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும்.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீதும், அதற்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி அடையாள கயிறுகள் கட்ட அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பா.ப.மோகன், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூர்த்தி, திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர் சங்கம் சார்பில் மனித சங்கிலி

நாங்குநேரில் நடைபெற்ற கொடூர சம்ப வத்தை கண்டித்தும், சாதி, மத பாகுபாடுகளை கடந்து, வேற்றுமை உணர்வை தவிர்க்க, சமத் துவத்திற்கான மனித சங்கிலி போராட்டத்தை யும், உறுதிமொழி ஏற்கும்  போராட்டத்தை நடத்த இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு அறைகூவல் விடுத்தது. அதனையேற்று மாண வர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில், கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த இயக்கத்திற்கு மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் தௌ.சம்சீர் அகமது தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், செயலாளர் அசாருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரூபா, ஜமுனா, குமரன் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவர் கள் கலந்து கொண்டனர். அதனைத்தொ டர்ந்து சமத்துவத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.