முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடக்கூடாதாம்!
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது நந்தபுரி காலனி. இந்த பகுதியில் உள்ள வீடுகளை, சொத்துக்களை முஸ்லிம்களுக்கு வாட கைக்கு விடவோ அல்லது விற்கவோ கூடாது என்றும், முஸ்லிம் ஜிஹாத்துக் களுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்றும் கூறி நந்தபுரி காலனி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டி ருந்தன. முக்கியமாக முஸ்லிம் மக்க ளின் வீடுகளிலும் இந்த சுவரொட்டி ஒட்டப் பட்டதால், நந்தபுரி காலனி முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நந்தபுரி காலனி அமைந்துள்ள 22-ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் அனிதா ஜெயின் தூண்டுத லால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட தாக தெரியவந்தது. இந்நிலையில், “இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நட வடிக்கையை எடுத்ததாக” அனிதா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரி வித்துள்ளார். முஸ்லிம்களுக்கு வீடு வாட கைக்கு விடக்கூடாது என்ற பாஜகவின ரின் பிரச்சாரத்தால் நந்தபுரி காலனியில் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலம் முழு வதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
கர்நாடக மாநிலம் பெங்களூ ருக்கு அருகே உள்ள ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 26 அன்று வயதான விவசாயி ஒருவர் ரயிலுக்காக காத்திருந்தார். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் (மெட்ரோ) தலை யில் இருந்த மூட்டை, அழுக்கான உடை களை காரணம் காட்டி விவசாயிக்கு அனு மதி மறுத்தனர். இதற்கு சகபயணிகள் எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னரே விவசாயிக்கு மெட்ரோ பாது காப்பு ஊழியர்கள் அனுமதி வழங்கி னர். அதன்பிறகே மெட்ரோ ரயிலில் விவ சாயி பயணித்தார். இதுகுறித்த காணொலி இணையத்தில் வைரலான நிலையில், பாதுகாப்பு பொறுப்பாளரை மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்வ தாக அறிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு மெட்ரோ நிர்வா கத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸில்,”அபாய பொருட்களை கொண்டு வந்தால் தடுக்கலாம். ஆனால் ஒரு நபர் அணிந்துள்ள உடையை வைத்து பொது போக்குவரத்து வாக னங்களில் பயணம் செய்ய அனுமதி மறுப்பது மனித உரிமை மீறல் விஷயம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மெட்ரோ நிர்வாகம் அறிக்கை அளிக்க வேண்டும்” என மனித உரிமை ஆணை யம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் செல்லும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு மாநிலங்களவை இடத் திற்கு செவ்வாயன்று தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் கொறடா உத்த ரவை மீறி 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், போதிய ஆதரவு இல்லாமலிருந்தும் பாஜக மாநி லங்களவை இடத்தை கைப்பற்றியது. மேலும் கட்சி மாறி வாக்களித்த அதே 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இமாச்சலப் பிர தேச ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் கைக் கோர்த்தனர். இந்நிலையில், வியாழனன்று கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சபாநாயகர் குல்தீப் சிங் பதனியா தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனால் இமாச்சலப்பிர தேச காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் இருந்து தப்பியது. இந்நிலையில், சபாநா யகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 6 பாஜக ஆதரவு எம்எல்ஏக்க ளும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஒபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி
புதுதில்லி, மார்ச் 1 - 2001 முதல் 2006 வரை, வருவாய்த் துறை அமைச்ச ராக பதவி வகித்த காலத்தில் ஓ. பன்னீர்செல்வம், வரு மானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த தாக 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதிமுக ஆட்சியின் போது, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்ப தால், வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையே சிவகங்கை நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. நீதிமன்ற மும் அதனை ஏற்று, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை, 2012 டிசம்பர் 3 அன்று வழக் கிலிருந்து விடுவித்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை அண்மையில் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்தார். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல் வம் உச்ச நீதிமன்றம் சென் றார். ஆனால் மறு விசாரணை க்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை
கள்ளக்குறிச்சி, மார்ச் 1 - கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு மற்றும் அவரது தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெள்ளிக்கிழமையன்று சோதனை மேற்கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா - முன்னாள் நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி, ரூ.16 கோடி மதிப்பி லான சொத்து ஆவணங்களை கைப்பற்றி னர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - தேமுதிக கூட்டணி?
சென்னை, மார்ச் 1- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேம லதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத் தில் வெள்ளியன்று சந்தித்தனர். இதில், மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக - தேமு திக இடையே கூட்டணி உறுதிசெய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.