states

img

தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்குக!

திருச்சிராப்பள்ளி, ஆக.6 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை  திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்க 4வது மாநில  மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில்  நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எம். சீனிவாசன் தலைமை வகித்தார். திருச்சி  கோட்ட தலைவர் எம்.மோகன் வர வேற்றார். நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித் துறை ஓய்வுபெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச்சங்க மாநில  பொதுச் செயலாளர் என்.குருசாமி துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செய லாளர் சி.குருசாமி வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாநிலப் பொரு ளாளர் ஆ.சாலமன் சமர்ப்பித்தார்.  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ந.சாந்தி, நெடுஞ்  சாலைத் துறை தலைமை பொறியா ளர் ரா.சந்திரசேகர், திருச்சி வட்ட கண்கா ணிப்புப் பொறியாளர் ஆர்.கிருஷ்ண சாமி, திருச்சி கோட்ட பொறியாளர் மு. கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.   தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை  பட்டய பொறியாளர்கள் சங்க மாநி லத் தலைவர் எஸ்.மதனமுசாபர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி அலுவ லர்கள் சங்க மாநிலத் தலைவர் வி.சக்தி வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாநாட்டில் நடந்த கருத்தரங்கில் “சமூக நீதியும், திராவிட மாடலும்” என்ற  தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாலைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக மட்டு மின்றி சமூக நீதிக்காகவும், சமூக சிந்த னையோடும் இந்த மாநாட்டை நடத்து வதை வரவேற்கிறேன். திமுக அரசு  இவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றும் என்ற நம்பிக்கையில் இந்த  மாநாட்டை நடத்துகிறார்கள். என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு துணை யாக இருப்போம்” என்றார். மாநாட்டில், தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்கள் பணியிடத்தினை நிரந்த ரப் பணியிட வரிசையில் சேர்த்து, நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும்.  காலியாக உள்ள இளநிலைப் பொறியா ளர் பணியிடங்களை, ஊட்டுப் பதவியில்  தகுதி உள்ளவர்களை கொண்டு நீதி மன்ற உத்தரவுப்படி உடனடியாக நிரப்ப  வேண்டும். சாலைகளின் நீளத்திற் கேற்ப சாலைப் பணியாளர்களின் பணி யிடங்களை அதிகரிக்க வேண்டும். கட்டு மானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்க ளில் நிலை– 2ல் உள்ள காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும்  என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. கவுரவ பொதுச் செயலாளர் மு.மாரி முத்து நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மகளிர் குழு நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மண்டல செயலா ளர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். திருச்சி கோட்டச் செயலாளர் எஸ். கார்த்திகேயன் நன்றி கூறினார்.