சென்னை,ஏப்.8- புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து,விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. 21 புறப்பாட்டு தலங்களை 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதில் சென்னை நீக்கப் பட்டுள்ளது. இதனால் சென்னையை மீண்டும் ஹஜ் பய ணத்திற்கான புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்த மானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கொச்சி க்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது புனித பயணம் மேற்கொள்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற் படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது. அப்போது மனு தாரர் தரப்பில், 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலை யம் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னை யில் இருந்து புனித பயணம் மேற்கொண்டு வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது ஹஜ் கமிட்டி தரப்பில், சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஹஜ் கமிட்டி பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலை யில் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.