states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘‘கலைஞர் எழுதுகோல் விருது’’  பெற விண்ணப்பிக்க அழைப்பு

இராமநாதபுரம், ஏப்.6- கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியன்று சிறந்த இதழி யலாளருக்கு ‘‘கலைஞர் எழுதுகோல் விருது’’ வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  2021 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு ரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இவ்விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். விருதினை பெறுவதற்கான தகுதிகளாக விண்ணப்பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இத ழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிற வராகவும் இருக்க வேண்டும், பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற் காகவும், விளிம்புநிலை மக்களின் மேம் பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற் றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும், விண்ணப்பதாரரின் எழுத்து கள் பொதுமக்களிடையே நல்ல தாக் கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படை யிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்து ரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விண்ணப்பங்களை விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

காட்டு மாடு முட்டியதில் வளர்ப்பு மாடு பலி

விருதுநகர், ஏப்.6- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த வளர்ப்பு மாட்டின் மீது காட்டுமாடு ஒன்று முட்டியதில் வளர்ப்பு மாடு உயிரிழந்தது. இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு, தென்னை, மா போன்ற பயிர் களும், சம்பங்கி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற வற்றையும்  விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் ராமராஜ் ஆகிய இருவரும்  விவசாயம் செய்து வருகின்றனர். இவர் களுடைய விளைநிலத்தில் கடந்த சில மாதமாக காட்டு மாடுகள் அதிக அள வில் வந்து  பயிர்களை சேதப்படுத்தி வரு வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து,  வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட் டுள்ளது.   இந்த நிலையில் புதனன்று அதி காலை, விளைநிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த வளர்ப்பு மாட்டை, காட்டு மாடு தாக்கியது. இதில், அந்த மாடு குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தது. எனவே, இதுகுறித்து மாட்டின் உரி மையாளர், வனத்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

பெண் எஸ்.ஐ.க்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

தேனி, ஏப்.6- போடி அருகேயுள்ள சிலமலையை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகள் பாண்டிச்செல்வி சார்பு ஆய்வாளராக தேவாரம் காவல் நிலையத்தில் பணி யாற்றி வருகிறார். காவல் நிலையத்தில் சில வழக்குகள் சம்பந்தமாக சார்பு ஆய் வாளர் பாண்டிச் செல்வி தீவிரமாக விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக இரு மர்ம நபர்கள் சிலமலையில் உள்ள பாண்டி செல்வி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது பெற்றோரை மிரட்டியுள்ளனர்.  மேலும் வீட்டிலிருந்த கண்ணாடி களை உடைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பாண்டிச் செல்வியின் தாயார் பஞ்ச வர்ணம் (53) போடி தாலுகா காவல் நிலை யத்தில் புகார் செய்தார்.

காளையார்கோவிலில் ஏப்.7-ல் குறைதீர் முகாம் 

சிவகங்கை, ஏப்.6-  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டி தலைமையில் ஏப்ரல் 7 காலை 10 மணி அளவில் காளையார் கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கூறுதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மறு வாழ்வு துறை உதவித்தொகை, உபகர ணங்கள் கேட்டல், குடும்ப அட்டையை திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வைக்கு தீர்வு காணப்படவுள்ளன.  எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிபிஎம் மாநில மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்ட தோழர்களுக்கு பாராட்டு

மதுரை, ஏப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்ட தோழர்களுக்கு பாராட்டுக்கள். கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு மதுரை -ராஜா முத்தையா மன்றத்தில் 2022 மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கள், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மாநாடு களில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். சிறப்பு அழைப்பாளர்கள் . பார்வையாளர் கள் என 550 பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். 3 நாட்கள் நடைபெற்ற மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநில மாநாட்டில் தொழிலாளர் - விவசாயி கள் - மாதர் - மாணவர் - வாலிபர் - சிறு பான்மை மற்றும் தலித் மக்கள் நலன்  சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. மாநில மாநாடு செல வினங்களுக்கு - மதுரை மாவட்டம் முழு வதும் வீடு , வீடாக மக்களை சந்தித்து நன் கொடை பெறப்பட்டது . கட்சியின் ஆதரவா ளர்கள், நண்பர்களிடமும் நன்கொடை பெறப்பட்டு மாநாடு பணிகள் நடைபெற் றன. மாநில மாநாடு விளம்பரக்குழு, உண வுக்குழு, தங்குமிடம் குழு, போக்குவரத்துக் குழு, செந்தொண்டர் குழு, கண்காட்சி குழு,  மருத்துவக் குழு, சமூக வலைதளக்குழு என பல்வேறு குழுக்கள் மூலம் மாநில மாநாடு பணிகள் சிறப்பாக நடைபெற்றது. கட்சி யின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் - மாநில மாநாட்டை வெற்றி கரமாக்கிடும் வகையில் நிதி வசூலில் ஈடு பட்ட தோழர்களுக்கும், மாநாட்டுப் பணி களை பல்வேறு குழுக்களில் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றிய தோழர் களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 வது மாநாட்டு வரவேற்புக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் , பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்

விருதுநகர், ஏப்.6- விருதுநகர் மாவட்டத்தில் மூலப் பொருட் கள் விலை அதிகரிப்பால் தீப்பெட்டி ஆலை நிர்வாகத்தினர் ஆலையை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் கார ணமாகவும் தீப்பெட்டி தொழிலுக்கு தேவை யான மெழுகு, சல்பர் மற்றும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 50 சதவீதம் முதல் 140 சதவீதம் வரை  அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தீப்பெட்டித் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் தீப்பெட்டி பண்டல்களுக்கு முறையான விலை கிடைக்காததால் அதிக அளவி லான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தீப்பெட்டி உற் பத்தி தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தி யாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.   விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்து இயங்கும் சிறு தொழிற் சாலைகள் அனைத்தும் தொழில் பாதிப்பு காரணமாக புதன் கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள் ளன. ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள் ளனர். இந்த போராட்டம் காரணமாக இதனை நம்பியுள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை யின்றி தவித்து வருகின்றனர்.

ஆய்வுக்கூட்டத்தில் குறைகளை கூற ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

மதுரை, ஏப்.6-  மருத்துவக் காப்பீட்டு திட்ட ஆய்வு கூட் டத்தில் தங்களின் குறைகளை கூறிட ஆசிரி யர்களுக்கு உரிய அனுமதி வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்டத் தலைவர் பி.முருகேசன், செயலா ளர் பெ.சீனிவாசன், பொருளாளர் எஸ். ஹெலன் தெரசா ஆகியோர் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து விவாதிக்க நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மதுரை  மாவட்ட அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு விபரங்களை எடுத்துக் கூற தொடர்ந்து வலியுறுத்தியும் இது நாள் வரை  ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை.  விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களுக்கு முறையாக சங்க நிர்வாகிகளுக்கு எழுத்துப் பூர்வமான அழைப்பு ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திற் கும் அனுப்பப்படுகிறது.  எனவே, இனிவரும் காலங்களில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்கு மதுரை  மாவட்ட அமைப்பிற்கும், எழுத்துப் பூர்வ மாக அறிவிப்பு வழங்கிட உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது. 

ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஏப் 6- பெட்ரோல் டீசல் மற்றும்  சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து  தாழை யூத்தில் புதனன்று கொட்டும் மழையில் இடைக் கமிட்டி உறுப்பினர் ஆர். சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர்  கே ஜி பாஸ்கரன் திரளான தோழர்கள் பங்கேற்ற னர்.

வீட்டின் பூட்டை  உடைத்து நகை திருட்டு

அருப்புக்கோட்டை, ஏப்.6- அருப்புக்கோட்டையில் பூட்டிய வீட் டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை போஸ்டல் கால னியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் பொன் னுச்சாமி(53). இவர்  தனது வீட்டை பூட்டி  விட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள் ளார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு சேதமடைந்து இருந்துள்ளது.  இதனால், அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் இரு மோதிரங்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து அருப்பு ககோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

30 பவுன் நகை,  1 லட்சம் பணம் திருட்டு 

விருதுநகர், ஏப்.6- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன்(50). இவரது மனைவி ராஜபுஷ்பம். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.  தாமோதரன் சாத்தூர் பகுதியில் சொந்தமாக பீரோ தொழிற்சாலை வைத் துள்ளனர். தாமோதரன் மற்றும் புஷ்பா  இருவரும் தனது உறவினர் வீட்டு திரு மண விசேஷத்திற்காக வெளியூர் சென்று புதனன்று மாலை வீடு திரும்பினர்.  அப்போது வீட்டின் கதவு திறந்த நிலை யில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாமோதரன் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் 1 லட்சம் மற்றும் 30 பவுன் நகை  திருடு போனது தெரியவந்தது.  இதையடுத்து சாத்தூர் நகர் காவல்  துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து திருட்டு குறித்து அக்கம்பக் கத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

ஒன்றிய அரசை கண்டித்து  காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

விருதுநகர், ஏப்.6- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல்,  கேஸ் மற்றும் சுங்கக் கட்டண விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு மோடி அரசிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி புதன்கிழமை 101 தேங்காய் உடைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் மாவட்ட துணைத்தலை வர் அரசன் ஜிவி.கார்த்திக் தலைமை வகித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு 101 தேங்காய்களை உடைத்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

மதுரை, ஏப்.6- மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை,  ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓட்டல் ஊழியர்க்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட மகிளா நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்கு நேரி அருகே சின்ன மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலமுரு கன் (34). இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் வேலை பார்த்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் ஹோட்டலில் வேலை பார்த்து விட்டு மதுரை ரயில் நிலையத் திற்கு வந்தார். அப்பொழுது அங்கு நெல்லையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியும், மனநிலை பாதிக் கப்பட்ட ஒரு பெண்ணும் இருந்த னர்.   மகளின் மன நல சிகிச் சைக்காக நெல்லையிலிருந்து மதுரை வந்து விட்டு பின்னர் ரயி லுக்காக இரவு நேரத்தில் காத்தி ருந்தனர். அப்போது அந்த வழி யாக வந்த பாலமுருகன், மூதாட்டி யிடம் பேச்சுக் கொடுத்து ,தேநீர் வாங்கி கொடுத்துள்ளார் . மூதாட்டி உறங்கிய பிறகு, மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சாப்பாடு வாங்கி தருகிறேன் என்று அழைத்து  சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மூதாட்டி, திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், பாலமுரு கன் தான், மனநிலை பாதிக்கப் பட்ட பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்தது உறுதியானது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், பிறப்பித்த உத்தரவில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, நெல்லையை சேர்ந்த பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு  25 பேர் காயம்

நத்தம், ஏப்.6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி- புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தி யார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடை பெற்றது.  ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களி லிருந்து 550 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.  பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி தலைமையில் 100க்கும் மேற் பட்ட காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.