states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மின்னல் தாக்கியதில் பெண் பலி: மற்றொரு பெண் படுகாயம்

விருதுநகர், ஏப்.11- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது எம்.புளியங்குளம். இக் கிராமம் திருச்சுழி-நரிக்குடி செல்லும் வழியில் உள்ளது.  இந்நிலையில், திங்களன்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரது மனைவி முத்துக் கருப்பாயி தனது நிலத் தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் முத் துக்கருப்பாயி பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சுழி போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இதேபோல், திருச்சுழி அருகே உள்ள  கேத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சென்னம்மாள் என்பவர் காட்டு வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந் தார். அப்போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதியவரிடம்  4 ஆடுகள் திருட்டு

அருப்புக்கோட்டை, ஏப்.11- அருப்புக்கோட்டை அருகே உள்ளது தொட்டியான்குளம். இப்பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (67). இவர் வழக்கம் போல தனது ஆடுகளை வீட்டின் பின் னால் உள்ள தொழுவத்தில் அடைத்தார். பின்பு, மறுநாள் காலை தொழுவத்தை திறந்த போது, அங்கிருந்த 4 ஆடுகளை காணவில்லை.  இதுகுறித்து ராமராஜ் அருப்புக் கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாய மான ஆடுகளைத் தேடி வருகின்றனர்.

லாட்டரி சீட்டு  விற்றவர் கைது

நத்தம், ஏப்.11- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற் பனை நடப்பதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.  இதன் பேரில் அந்த பகுதியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது செந்துறை பேருந்து நிலைய பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற ராஜ்குமார் (53) என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மறமடக்கியில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை, ஏப்.11 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கியில் முதல் முறை யாக ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  போட்டியில், புதுகை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர் வத்துடன் அடக்கினார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 26 பேருக்கு காயம் ஏற்பட்டது. பலத்த காய மடைந்த 14 பேர் அரசு மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி: போக்சோவில் ஆசிரியர் கைது

விருதுநகர், ஏப்.11- இராஜபாளையம் அருகே சோழபுரம் பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தற்காலிக ஆசிரி யர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே சோழபுரம் பகுதியில் அரசு  உதவி பெறும் பள்ளி உள்ளது. இதில், சோழ புரம், முறம்பு உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் புனல்வேலியைச் சேர்ந்த காஞ்சி மன்னன் என்பவரது மகன் தங்கராஜ் (35) தற்காலிக ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். இதை மாணவியின் தங்கை அங்கு பணி யாற்றும் ஆசிரியைக்கு அனுப்பி வைத்தார். ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதன்பேரில் காவல்துறையினர், தற்கா லிக ஆசிரியர் தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறை யில் அடைத்தார்.

தேனி மாவட்டத்தில் கனமழை ஒரே நாளில் 10 அடி உயர்ந்த சோத்துப்பாறை அணை

தேனி, ஏப்.11- தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை  காரணமாக பெரியகுளம் பகுதியில் வாழை கள் சேதமடைந்தன. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடியை  எட்டியது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத் துக்கும் மேலாக சாரல் மழை பெய்து வரு கிறது. கடந்த 2 நாட்களாக பெரியகுளம், தேவதானப்பட்டி, போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்தது. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த வடகிழக்கு பருவமழை யின் போது முழு கொள்ளளவை எட்டியது. ஞாயிறன்று 81.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை 92.16 அடியாக உயர்ந்துள்ளது. இதே போல  74 கன அடியாக இருந்த நீர்வரத்து 131 கன  அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 51.62 மி.கன அடியாக உள்ளது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைகை அணையின் நீர் மட்டம் 68.54 அடி யாக உள்ளது. வரத்து 35 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 5455 மி.கன அடி. பெரி யாறு அணை நீர் மட்டம் 125.75 அடி. வரத்து 850 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 3780 மி.கன அடி. வாழை சேதம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதி களான சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்ல  கருப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான விவசாயிகள் நடவு செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் பாதி விளைச்சல் அடைந்தும் மற்றும் பிஞ்சு காய்களுடன் இருந்தது. இந்நிலையில் இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததில் வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து சேதம் அடைந்தன. மேலும் நல்ல கருப்பம்பட்டி பகுதியில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் முற்றிலும் முறிந்து சேதம் அடைந்தது.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையத்திற்கு  வாராந்திர சிறப்பு ரயில் சேவை

மதுரை, ஏப்.11-  கோடைகால விடுமுறை கூட்ட நெரி சலை தவிர்க்க, தென்காசி, இராஜபாளை யம், மதுரை வழியாக திருநெல்வேலி -  மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள் ளது.  இதன்படி திருநெல்வேலி - மேட்டுப் பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஏப்ரல் - 21 முதல் ஜூன் - 30 வரை வியா ழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.  மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர (06029) சிறப்பு ரயில் ஏப்ரல் - 22 முதல் ஜூலை - 1 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளை யத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல் வேலி சென்று சேரும்.  இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பா சமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, இராஜபாளையம், திருவில்லி புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்  டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடு மலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம் புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  மேலும் இந்த ரயில்களில் ஒரு குளிர் சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு  படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.

சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் மதுரை ஆட்சியர் அறிவிப்பு

மதுரை, ஏப்.11- சித்திரை திருவிழாவில் அன்ன தானம் வழங்க அனுமதி பெற வேண் டும் என்றும் மதுரை மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்றிதழை ‘foscos’ என்ற இணையதளம் மூலம் பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திரு விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், பக்தர் களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள் ஆகி யவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.  மேலும், தமிழக அரசால் தடை செய் யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து, கழிவுகளை முறையாக சேக ரித்து மாநகராட்சி தெரிவித்துள்ள இடங்க ளில் கொண்டு சேர்க்க வேண்டும்.  இதேபோல், கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை தரமான, குடி நீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவு களை விற்பனை செய்ய வேண்டும்.  திருவிழாவை முன்னிட்டு, மண்ட கப்படிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம் வழங்கும் நபர்கள் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று  மட்டுமே வழங்க வேண்டும். மேலும்,  உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்றி தழை ‘foscos’ என்ற இணையதளம் மூலம் பெறலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு குறித்து சீராய்வு கூட்டம் 

சின்னாளப்பட்டி, ஏப்.11- நிலக்கோட்டை, அம்மைய நாயக்கனூர் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு குறித்த அவசர வரிவிதிப்பு சீராய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் முரு கேசன் வரவேற்றார். கூட்டத்தில் அனை த்து கவுன்சிலர்களும் கலந்து கொண்ட னர். அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த னர்.  இதேபோல அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில் தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விமல்குமார் வர வேற்றார்.  கூட்டத்தில் வரிவிதிப்பு குறித்த தீர்மா னம் உட்பட குடிநீர் மின்விளக்கு உள்  ளிட்ட தீர்மானங்கள் அதிமுக கவுன் சிலர்கள் ஆதரவோடு ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.  கூட்டத்தில் கவுன்சிலர்கள் கரு ணாகரன், கவிதாராஜாங்கம், செல்வி, சத்தியா, முகமதுநஷீர்,மாரியப்பன் உட் பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கவுன்சிலர் விஜயக்குமார் நன்றி கூறினார்.

மாநில சைக்கிளிங் போட்டியில் அரிமா பள்ளி மாணவர்கள் வெற்றி

திருவில்லிபுத்தூர், ஏப்.11- தமிழ்நாடு சைக்கிளிங் சாம்பி யன்ஷிப் போட்டிகள் அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில சைக்கிளிங் கழகம் சார்பில் நடை பெற்றது.  இதில், 12 வயதுக்குட்பட்ட மாண வர்களுக்கான போட்டியில் அரிமா பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் உதய கமல் முதல் பரிசையும், கிஷோர்குமார் இரண்டாம் பரிசையும் வென்றனர்.  14-வயதுக்குட்பட்ட போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாதேஷ் வரன், மாணவி நித்திய ஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர். 16-வயதிற்குட்பட்ட போட்டி யில் மாணவி சுவாதிகா முதல் பரிசும், செல்வரஞ்சித் மூன்றாமிடமும் பெற்ற னர். 18 - வயதிற்குட்பட்ட போட்டியில் மாணவி செல்வக்கீர்த்தனா முதலிட மும், நித்தீஷ் மூன்றாமிடமும் பெற்றனர். இந்தியன் சைக்கிளிங் போட்டியில் மது மிதா, சுஜன் இருவரும் முதல் பரிசு பெற்ற னர்.  வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜையும் அரிமா பள்ளித் தாளாளர் ஆர்.வெங்கடா சலபதி, பள்ளி முதல்வர் எம்.பி.முரு கன், துணை முதல்வர் எம்.திவ்யநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.