சென்னை, ஜூன் 29- அத்தியாவசிய உணவுப் பொருட்க ளான அரிசி, கோதுமை, மைதா, தயிர் போன்ற பொருட்களுக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு என்பது மனித நேயமற்றது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்தீஷ்கரில் செவ்வாயன்று (ஜூன் 28) நடைபெற்ற 47ஆவது ஜி.எஸ். டி.கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடுத்தர அடித்தட்டு மக்களை மிகப்பெரும் பாதிப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக பிராண்டட் என்பதற்கு மாற்றாக உரைகளில் பாக்கிங் செய்து சீலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, மைதா, தயிர் போன்ற பொருட்களுக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு என்பது நியாயத்திற்கு புறம்பான, மனித நேயமற்ற, பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் முடிவு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழுத்தமாக பதிவு செய்கின்றது. ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தங்கும் விடுதி அறைகளின் வாடகை மீது 12 விழுக்காடு வரிவிதிப்பும், அஞ்சலக சேவைகளுக்கும் 5 விழுக்காடு வரி விதிப்பு என்பது மனிதாபிமானமற்ற அடித்தட்டு மக்களின் மீதான தாக்குதலாகும். இதை பேரமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
மாதம் தோறும் ஜி.எஸ்.டி வரி வருவாய் பெருகிவரும் நிலையில், பொதுமக்களுக்கு வரி குறைப்புக் கான வழிகளை ஆராய்ந்து அமல்படுத்தாமல், மீண்டும், மீண்டும் ஒன்றிய, மாநில அரசுகள் வரியை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மீதான பொருளாதார தாக்குதல் என்பதையும், அதில் அடித்தட்டு, நடுத்தர மக்களின் நலன்களை சிறி தளவும் சீர்தூக்கி பார்க்காமல், வரி ஏற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாகும். இது பொதுமக்களையும், அவர்க ளின் வாழ்வாதாரத்தையும் பாதிக் கின்ற செயல் என்பதை கவனத்தில் கொண்டு, மேலே கூறியுள்ள உரை களில் பாக்கிங் செய்து சீலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் மீதான 5 விழுக்காடு வரி உயர்வை யும், ஆயிரம் ரூபாய்க்கும் குறை வான தங்கும் விடுதி அறைகளின் வாடகை மீதான 12 விழுக்காடு வரி விதிப்புப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஜி.எஸ்.டி சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை விரைந்து களைந்திடவும், சிறு, குறு வணிகர்கள் புரிந்துகொள்ளும் வகை யில் எளிமைப்படுத்தி, வணிகர்க ளுக்கான பாதிப்புகளை அகற்றிட வும், அரசு முனைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.