states

மதுரை முக்கிய செய்திகள்

நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, அக்.19- தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 21.10.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை யில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரி டம் நேரில் அளித்திடலாம். இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறை பாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைக ளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும்  இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.

குலசை தசரா திருவிழா உண்டியல் வருவாய் ரூ.3.5 கோடி

தூத்துக்குடி, அக்.19- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி வருவாய் கிடைத்துள்ளது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் கோவி லில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தினர். இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கடந்த 5 நாட்களாக நடந்தது. கோவில் நிரந்தர உண்டியல்கள் 13, தற்காலிக உண்டியல்கள் 56 என மொத்தம் 69 உண்டியல்களில் கிடைத்த காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114-ஐ காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 134.80 கிராம் தங்கமும், 2 கிலோ 416 கிராம் வெள்ளியும் கிடைத்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு  காணிக்கையை ஒப்பிடும்போது, ரூ.1 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை அறிவியல் மையத்தில் கண்காட்சி

தூத்துக்குடி, அக்.19- தூத்துக்குடி மாவட்டத்தில், உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்து வதற்கான கண்காட்சி வாகைகுளம், ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் 21.10.2022 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாயிகளும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு உயர்தர இரகங்களை காட்சிப் படுத்தலாம். வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இக்கண்காட்சியின் வாயிலாக வீரியமிக்க குணங்களை கொண்ட இரகங்களை கண்ட றிந்து புதிய இரகங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும்.  எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களி டம் உள்ள உயர்தர  இரகங்களை கண்காட்சியில் காட்சி  படுத்திடவும், கண்காட்சியில் கலந்து கொள்ளவும், விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.  குறைதீர்க்கும் சிறப்பு முகாம்   

குறைதீர்க்கும் சிறப்பு முகாம்  

 தூத்துக்குடி, அக்.19- தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நாளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும்,மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று ம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  தூத்துக்குடி மாவட்டம், 20.10.1986 – ல் உருவாக்கப்பட்ட தை முன்னிட்டு அக்டோபர் 20 (வியாழக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களி லும் சுத்தம், சுகாதாரம் என்பதற்கேற்ப சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்து அதன் தொடர்ச்சியாக அலுவலக வளாகங்களில் மரங்கள் நடவும் அனைத்து அரசு அலுவலகங்களையும் அழகுபடுத்திட வும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலு வலகங்களிலும் 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட வேண்டும்.  பொதுமக்கள் இந்த முகாமில் தமது குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெற கேட்டுக் கொள் ளப்படுகிறது மேற்படி நாளில் பெறப்படும் மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெற  உள்ளது. மேற்படி தினத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் அலு வலகத்தை சுத்தமாக வைத்து மரம் நடும் பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்து தனியார் நிறுவனங்க ளும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சி யர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

கோணத்தில் அக்.30 வரை ஐடிஐயில் நேரடி சேர்க்கை

நாகர்கோவில், அக்.19- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், நேரடி சேர்க்கை மூலம்  மாணவர்கள்  சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. நேரடி சேர்க்கைக்கான கடைசி நாள் 30.10.2022. தொழிற் பயிற்சி நிலை யத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அலு வலக வேலை நாட்களில்  தொழிற் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து காலி யிடங்கள் உள்ள தொழிற் பிரிவை தேர்ந்தெ டுத்துக் கொள்ளலாம். தொழிற் பயிற்சி நிலை யங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.  பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாண வர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.750, பேருந்து கட்டணச் சலுகை, மிதி வண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீரு டைகள், 1 செட் காலணிகள் அரசால் வழங்கப் பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகலாம். 04652-260463, 261463. அரசு, தனியார்  மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு கள் உள்ளதால் அனைவரும் அரசு ஐடிஐ-யில் சேர்ந்து பயன்பெறலாம் என குமரி மாவட்ட ஆட்சியல் மா.அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில்  ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருநெல்வேலி, அக்.19- தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இந்த கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதற்காக முந்தைய நாள் இரவிலே வியா பாரிகள் தங்களது ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்து விடுவார்கள். இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் சிவந்திப்பட்டி, இட்டேரி, வள்ளியூர், நாங்குநேரி, அம்பா சமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிக ளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், செய்துங்கநல்லூர், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந் தும், தென்காசி மாவட்டத்தில் ஆலங் குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் தங்களுடைய ஆடு களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சந்தையில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நிலை யில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி செவ்வாய்கிழமை  மேலப்பாளை யம் கால்நடை சந்தையில் ஆடுகள் வாங்கு வதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அங்கே சிறிய ஆட்டுக்குட்டிகள் 3000 முதல் விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. செவ்வாயன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடிக்கு கால்நடை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஆடுகளை வாங்க வந்தவர்கள் கூறும்போது, இந்த ஆண்டு ஆடு விற்பனை அமோகமாக உள்ளது. ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இறைச்சி வியாபாரம் நன்றாக இருக்கும். எனவே விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கி றோம் என தெரிவித்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  ஒருவர் மீது வழக்கு 

 திருநெல்வேலி, அக்.19- உவரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய தாழை மிக்கேல் நகரை சேர்ந்தவர் சந்தியாகு மகன் சுபாஷ் (வயது 27). மீனவர்.  இவர் 13 வயது சிறு மிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.   சுபாஷ் மீது போக்சோ சட்டத்தில் உவரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


நெல்லையில் 2 வயது  சிறுவன் திடீர் சாவு

திருநெல்வேலி, அக் .19- நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜோதிராஜா. இவர் தூத்துக்குடியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.  இதில் சீனிவாசன் (2) என்ற ஆண் குழந்தைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப் பட்டு இருந்தது. தற்போது குணமாகி விட்ட நிலையில்   செவ்வாய் இரவு வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சீனிவாசனை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக சந்திப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம்  மேலும் ஒரு அடி உயர்வு

திருநெல்வேலி, அக்.19- நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.  நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அணை பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 2 அடி உயர்ந்த நிலையில் புதன்கிழமை மேலும் 1 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் 83.45 அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 96.23 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1197.45 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 404.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. புதன்கிழமை நிலவரப்படி பாபநாசத்தில் 1 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

பசுமை பட்டாசுகளை மட்டுமே  பொதுமக்கள் வெடிக்க வேண்டும் நெல்லை ஆட்சியர் வேண்டுகோள்

திருநெல்வேலி, அக்.19- நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். அதே நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள் ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்ட முதியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தி யுள்ளபடி தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை யன்று காலை 6 முதல் 7 மணி வரை யும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  சுற்றுச்சூழலை பாது காப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே பொது மக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனு மதியுடன் பொதுமக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம்  முயற்சிக்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், குடிசை பகுதி மற்றும் அமைதி காக்கப்படும் இடங்க ளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க  வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

பால் கொள்முதல் விலையை  உயர்த்த ஆட்சியரிடம் கோரிக்கை

தூத்துக்குடி, அக்.19- ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி தரப்படவில்லை. தற்போதைய சூழ்நிலை யில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு, தீவனம், மாடு பராமரிப்பு, மருத்துவ செலவுகள் பல மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளனர். பால் உற்பத்தி யாளர்களின் சிரமங்களை தவிர்க்க பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 10 உயர்த்தி 42 ஆகவும், எருமைமாடு பால்   லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி 51 ஆகவும் வழங்க வேண்டும், அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தி யாளர் ஒன்றியம் கோவில்பட்டி பால் குளிர்பதனை நிலை யத்தில் நிரந்தர பொறுப்பாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  மனுவில் கூறியுள்ளனர். இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் மகாலிங்கம், செயலாளர் ராமசுப்பு, து.தலைவர் நியூட்டன், து.செயலாளர் பாலமுருகன், கண்ணன், லிங்கராஜ், ஈராட்சி தலைவர் பிரபு, முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட  வீரர்கள், தியாகிகளின் அரிய புகைப்படங்கள்  மக்கள் தொடர்பு அலுவலகம் வேண்டுகோள் 

தென்காசி,அக். 19 தென்காசி மாவட்டத்தில் உள்ள சுதந்திரப்போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள் ஆகியோரின் புகைப்படம், தோற்றம், மறைவு, போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்டு, சிறை சென்ற ஆண்டுகள், வாரிசுதாரர்களின் பெயர் மற்றும் அரிய தகவல்களை உள்ளடக்கிய “காலப்பேழை” என்ற புத்தகம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தயாரித்து வெளியிடப்படவுள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்புடைய தகவல்கள் பொது மக்களிடமிருப்பின் protenkasi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோஅல்லது உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் தொலைபேசி எண் 9626394726 என்ற  எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தி விரட்டியடிக்கும் வங்கி மேலாளர்

நாகர்கோவில், அக்.19- வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தி விரட்டிய டிக்கும் வங்கி மேலாளரை கண்டித்து விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் களியல் வட்டாரம், புலியூர் சாலை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அவ் வங்கியில்  கணக்கு வைத்துள்ள அப்பகுதியை சார்ந்த ஏழை எளிய பெண் தொழிலாளர்களை அவமதிப்பதும், கெட்ட வார்த்தைகள் பேசி இழிவு படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. வங்கி காவலாளியை வைத்து விரட்டுவது போன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை  கண்டித்தும், இம் மேலாளரை உடனடியாக இடம்மாற்ற  செய்ய வலியுறுத்தியும் அஇவிதொச சார்பில் வங்கி முன் போராட்டம் நடைபெற்றது.

வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது

 திருவில்லிபுத்தூர்,அக்.19- திருவில்லிபுத்தூர் இந்திரா நகரில் வசிப்பவர் கிருஷ்ணசாமி (வயது 60). இவர் பட்டாசு ஆலை  நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவரது வீட்டில் அரசு அனுமதி இல்லாமல் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு வகைகள் 534 பெட்டிகள்  இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நகர் காவல் சார்பு ஆய்வாளர் கணேசன் விரைந்து சென்று பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி உடல் மீட்பு

மதுரை, அக் 19-  வைகை ஆற்றுவெள்ளப்பெருக்கில்அடித்து வரப்பட்ட  60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடலை  தீயணைப்புத்துறையினர் மீட்டனர். தற்போது வைகை அணையின் நீர்மட்டம்  70 அடி எட்டியுள்ளதால்  அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 7000 ஆயிரம் கன அடிநீர் வெளியேறி வருகிறது. கரையோர பகுதி களில் காவல்துறை தொடர்ந்து  பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்  60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி உடல் ஆரப்பாளை யம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மிதந்தது. உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாசனக்குழாய் உடைப்பை கண்டித்து சின்னமனூரில் மறியல் 178 விவசாயிகள் கைது 

தேனி ,அக்.19- சின்னமனூரில் பாசனக்குழாய் உடைக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற மறியலில் பங்கேற்ற  178 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள முத்துலா புரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, அப்பிபட்டி,  எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் மேட்டுப் பாங்கான பகுதியில் அமைந்துள்ளன. இதனால்  முல்லைப் பெரியாற்றின் மூலம் பாசன வசதி பெற முடியாத நிலை  உள்ளது. ஆகவே ஆற்றின் கரைப்பகுதியில் ஆழ்குழாய் அமைத்து குழாய் மூலம் நீரை கொண்டு சென்று பாசனம் செய்து வருகின்றனர். அனுமதியின்றி குழாய்களை பதித்ததாகக் கூறி நெடுஞ்சாலைத்துறை கடந்த மாதம் இக்குழாய்களை அகற்றியது. இதனால் சுமார் 2 ஆயிரத்து 500ஏக்கரிலான பயிர்கள் வாடத் தொடங்கின. பாசனக் குழாய்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சின்னமனூர் உத்தம பாளையம் சாலையில் மறியல் போராட்டம் நடை பெற்றது.பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 178 விவசாயி களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் கனமழை சுவர் இடிந்து முதியவர் பலி

தேனி, அக்.19- தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  தேவாரம் அருகே சுவர் இடிந்து விழுந்த சம்ப வத்தில்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்  உயிரி ழந்தார். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படு கிறது. இந்த நிலையில், தேனி  மீனாட்சிபுரத்தில் துக்க வீட்டிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மாயழகன் மகன் ஜெக நாதன்(65), சாலையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந் தார். ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்ட ஜெகநாதன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனி, குட்செட் தெருவில் மழை யால் வீடு இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி இளவரசி (51) என்பவர் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். பெரியகுளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள கால்வாய்கரை யில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயமங்கலத்தில் வேட்டு வன்குளம் கண்மாய்க்கான நீர் வரத்து ஓடையில் உடைப்பு ஏற்பட்டு,தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் செய்கிறது. இவற்றை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர்.

இளையோர் கலை விழாவில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு

நாகர்கோவில், அக்.19- இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது நேரு யுவ கேந்திரா. இது நாட்டிலுள்ள இளைஞர்களை ஒருங்கி ணைக்கும் முகமாக தேச நலன் கருதி ஆண்டு தோறும் இளையோர் கலை விழா வினை மாவட்ட அளவில் நடத்தி வருகின் றது. நாடு சுதந்திரம் பெற்று 75ஆம் ஆண் டினை அமுத பெருவிழாவாக கொண்டாடும் வகையில் இவ்வாண்டு இளைஞர் கலை விழாவினை மிக சிறப்பாக கொண்டாட கன்னியாகுமரி மாவட்ட நேரு யுவ கேந்திரா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் கோகுல் சுகுமாரன் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நேரு யுவ கேந்திரா இளைஞர்களின் ஆளுமை மற்றும் திறன் களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு  ஆண்டு தோறும் இளையோர் கலை விழாவினை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான இளையோர் கலை  விழா வருகின்ற அக்டோபர் 27 வியாழ னன்று நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி யில்  நடைபெற உள்ளது. இக்கலை விழாவில் இளம் எழுத்தாளர் போட்டி கவிதை( தமிழ், இந்தி, ஆங்கிலம்), இளம் கலைஞர் போட்டி - ஓவியம், அலை பேசி புகைப்படப் போட்டி, பிரகடனப் பேச்சுப் போட்டி (இந்தி, ஆங்கிலம்), இளை யோர் சொற்பொழிவு (தமிழ், இந்தி, ஆங்கி லம்), கலை திருவிழா - குழவாக (நாட்டுப் புற நடனம், நாட்டுப்புற பாடல், பரதம்) ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும். 15 முதல்  29 வயது வரையுள்ளோருக்கு மட்டுமே அனுமதி. மாவட்ட அளவிலான இப்போட்டி யில் இம்மாவட்டத்தைச் சார்ந்தவர் மட்டுமே கலந்து கொள்ள இயலும். போட்டியில் கலந்து கொள்வோர் தங்க ளது ஆதார்அட்டை, வயதினைக் காட்டும் சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், தங்கள் திறமையினைக் காட்டும் காணொலி காட்சிகளுடன் அல்லது திறனுக்கான பட சான்றுகளுடன் இம்மாதம் 21ஆம் தேதிக்கு முன்னதாக yuvautsav22kk@gmail.com என்ற இணைய முகவரியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்களை தேர்வு செய்ய படங்கள், காணொலி காட்சிகள் கட்டாயம் தேவை. 27ஆம் தேதி நடைபெறும் மாவட்ட கலை விழா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் தனித் தனியாக அனுப்பி வைக்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பெறுகின்ற வெற்றியாளர்கள் மாநில அளவில் நடை பெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து தேசிய அளவிலும் போட்டிகள் மற்றும் இளையோர் கலைவிழாவும் நடைபெறும். இளையோர் கலை விழா போட்டி விதிமுறைகள் மற்றும் பதிவுமுறை பற்றிய விவரங்களுக்கு மாவட்ட இளை யோர் அலுவலரை 9000962602 என்ற எண்ணிலோ ரெங்கநாதன் நேரு யுவ கேந்திரா 9894858822 என்ற எண்ணிலோ பேரா.வி.வேணுகுமார் தெ.தி இந்து கல்லூரி 9442788711 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.