states

தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஆளுநர்

சென்னை,ஏப்.15-  ஆளுநர் மாளிகையில் ஏப்.14 அன்று நடந்த பாரதியார்  சிலை திறப்பு விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை சிபிஎம் உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த நிலையில், தமிழக அரசும் புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில்  பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும்  ஆளுநரின் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் பங்கேற்க முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலை வர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக  செயல்படும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள்  புறக்கணித்தன. இந்நிலையில்,அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்காக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி  சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பவில்லை. இது தொடர்பாக பல்வேறு தரப்பு களிடம் இருந்து எழுந்த  எதிர்ப்பு களைத் தொடர்ந்து, நீண்ட நாட்க ளுக்குப் பிறகு அந்த சட்ட மசோதாவை  அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிவைத்தார். இதனால், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி சட்ட ப்பேரவையை கூட்டி, நீட் விலக்கு சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த மார்ச் 15 ஆம் தேதி ஆளுநரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார். அப்போது, மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் உறுதி அளித்த ஆளுநர், அதன்பிறகும் அதை அனுப்பவில்லை. கடந்த 31 ஆம் தேதி முதல்வர் தில்லி  சென்றபோது, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை சுட்டிக் காட்டி, வரும் கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி நெருங்கு வதால், அதற்கு முன்பாகவே முடிவெடுத்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்  அளிக்க அழுத்தம் தருமாறு கேட்டுக் கொண்டார். இத்தனைக்கும் பிறகும்கூட, 208 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் சட்டப்பேரவை யின் மாண்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளன.

சட்டப்பேரவையின் மாண்பு, தமிழக  மக்களின் உணர்வு, கிராமப்புற மாணவர்க ளின் மருத்துவக் கனவு இவற்றையெல்லாம் பிரதிபலிக்கக் கூடிய வகையில், முதல்வரின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் இருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான மசோதாவுக்கும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. இதுபோல மேலும் சில சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டி இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஒரு உத்தர வாதத்தையோ, காலவரையறையையோ ஆளுநர் தராத நிலையில், ஆளுநர் மாளிகை யில் நடக்கும் பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும், தேநீர் விருந்திலும் முதல்வர்  உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வது நூற்றாண்டு கண்ட தமிழக  சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக்  கூடியதாகவும், ஒட்டுமொத்த தமிழக  மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக வும் அமைந்துவிடும். எனவே, இந்த இரு நிகழ்ச்சிகளிலும் முதல்வரும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதிமுக, பாஜக பங்கேற்பு இந்நிலையில், அதிமுக, பாஜக, தமாகா  கட்சிகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர்.