புதுதில்லி, ஜூன் 23- மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் முத லில் சூரத்திற்கும், பின்னர் அசாம் மாநி லம் கவுகாத்திக்கும் கொண்டுசெல்லப் பட்டுள்ள விதம் கடும் கண்டனத்திற்குரி யது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இவ் வாறு சிவசேனா சட்டமன்ற உறுப்பி னர்களை கொண்டு செல்வதற்கு பாஜக இரு மாநிலங்களிலும் உள்ள தங்கள் மாநில அரசுகளைப் பயன்படுத்திக் கொண் டிருக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள அமைப்புகளையும், மகா விகாஷ் அகாதி அரசாங்கத்தின் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் குறி வைத்துத் தாக்குவதற்காகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அர சாங்கங்களைக் கவிழ்க்கும் நோக் கத்துடன் முன்பு மேற்கொள்ளப்பட்ட இழி முயற்சிகளைப்போலவே இப்போதும் நாணமின்றி அரசு எந்திரத்தைப் பயன் படுத்தி இருக்கிறது. ஜனநாயகத்தை அரித்து வீழ்த்துவ தற்காக அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோ கம் செய்வதற்கு எதிராக, கிளர்ச்சி நட வடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து ஜனநாயகப் பிரிவினருக்கும் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)