சென்னை, ஏப். 25 - பொது போக்குவரத்தில் அரசு முதலீடு செய்வது இழப்பு அல்ல என்று சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வரங்கில் தலைவர்கள் பேசினர். பலமடங்கு வாகன பெருக்கம் பொதுப்போக்குவரத்து மேம்பாடு தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னம் (சிஐடியு) சார்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசியதாவது: புவி வெப்பமாதலால் ஒட்டு மொத்த சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பணக்கார நாடு கள்தான். இரும்பு, நிலக்கரி, மின்சாரம், கார்பன், பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் பயன்பாடு வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகளவில் உள்ளன. ஆனால் அதை அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியா வதால் புவி வெப்பமயமாகிறது. ஆகை யால் அதை கட்டுக்குள் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டு பல நாடுகளில் கடல் ஊருக்குள் நுழையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வாகனப் பெருக்கம் தான்.
கடந்த 30 ஆண்டுகளில் வாகனங் களின் எண்ணிக்கை பலமடங்கு அதி கரித்திருக்கிறது. இதில் 70 விழுக் காடு இரண்டு சக்கர வாகனங்கள். அதற்கேற்றால் போல் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் போக்குவரத்து நெரிசல் குறைய வில்லை. தனிநபர் பயன்படுத்தும் வாக னங்களின் எண்ணிக்கை, பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அதற்கான திட்டமிடல் இல்லை. மேலும் எந்த திட்டமிடலும் இல்லாமல் நகரமயமாதல் என்பது மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. நகரமயமாவதால் விபத்து, உயிரிழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, புவி வெப்பமாதல் என அனைத்திலும் அதன் பாதிப்பு பிரதிபலிக்கும். குடியிருப்புகளுக்கு அருகிலேயே தரமான கல்வி கிடைக்கும் என்றாலே பாதி போக்குவரத்து குறையும். இவ்வாறு அவர் பேசினார்.
லாப நட்ட கணக்கு பார்க்காதே!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேசியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்களுக்கு செய்த சாதனை களை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதை அதி காரிகளும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. பல கிராம மக்கள் அரசு பேருந்து இயக்கப்படவில்லை என்றால் எங்களுக்கும் உலகத்திற்கும் தொடர்பில்லை, எங்கள் குழந்தைகள் படித்திருக்க முடியாது, எங்களுக்கு உரிய வருமானம் இருக்காது எனக் கூறுகிறார்கள். சமுதாய வளர்ச்சிக்கு, செயல்பாட்டுக்கு, முன்னேற்றத்திற்கு அரசு போக்குவரத்து பயன்படு கின்றன. எனவே இதில் அரசு லாப நஷ்ட கணக்கு பார்க்கக் கூடாது. பெண்களுக்கு இலவசம் என அறிவித்த பிறகு செம்மஞ்சேரியில் வாழும் பெண்களின் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இது அரசிற்கு இழப்பு கிடையாது. இதன்மூலம் பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கிறது. அரசு ஒரு ரூபாய் பொது போக்குவரத்திற்கு செல வழித்தால் 4 ரூபாய் அரசிற்கு பொது சுழற்சியின் மூலம் வரும். ஆனால் இதை அதிகாரிகள் புரிந்து கொள்ளா மல் தவறான முடிவுகளை எடுக் கிறார்கள்.
ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டங்களை கொண்டு வந்துள் ளது. அதன்படி 15 ஆண்டுகள் பயன் படுத்திய பேருந்துகளை அப்புறப் படுத்த வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால் மாற்று திட்டமில்லாமல், மாற்று ஏற்பாடு இல்லாமல் அனுப்பி னால் என்ன நிலை ஏற்படும். தற்போது தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 15 ஆண்டு களை கடந்தவை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகம் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக அரசு உடனடியாக ஒரு திட்டமிட லுக்கு வர வேண்டும். நாம் நம்முடைய கோரிக்கைகளுக்காக போராடு கின்ற அதே நேரத்தில் மக்களின் சேவைக்கு பயன்படும் போக்கு வரத்துக் கழகங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டி யுள்ளது என்றார்.
பொது போக்குவரத்தே முதுகெலும்பு
காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றக் குழு உறுப்பினர் செல்வப் பெருந்தகை பேசுகையில், பொருளா தார வளர்ச்சியில் பொது போக்கு வரத்திற்கு ஒரு மிகப்பெரிய பங்குள் ளது. உலகின் பல நாடுகளின் பொரு ளாதார வளர்ச்சிக்கு பொது போக்கு வரத்து முக்கிய பங்களிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பல நாடு களில் பொது போக்குவரத்தில் கட்ட ணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று நிலையை உருவாக்கப் போகிறார்கள். தமிழகத்தில் பொது போக்கு வரத்து ஒரு நாள் ஸ்தம்பித்தால் எந்த வேலையும் நடைபெறாது. ஜிடிபி வளர்ச்சி சட்டென சரிந்து விடும். கேரளா உள்ளிட்ட ஒருசில மாநி லங்களில் அரசு பொது போக்கு வரத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கல்வியும், சுகாதாரமும் இரண்டு கண்கள் என்றால் பொது போக்குவரத்து முதுகெலும்பு. எனவே பொது போக்குவரத்தை மேம்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.