திருவனந்தபுரம், ஜுலை 2- அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றோர், அவர்தம் குடும்பங்களுக்கான மெடிசெப் திட்டத்திற்கு மாநில அரசு அளிக்கும் உத்தர வாதமே முக்கிய பிரிமியம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மெடிசெப் திட்டத்தை வெள்ளியன்று (ஜுலை 1) ஆரம்பித்து வைத்து உரையாற் றும் போது அவர் மேலும் கூறியதாவது: இத் திட்டத்திற்கு அரசு ஒரு ரூபாய் கூட பிரீமிய மாக செலுத்தவில்லை என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அளித்துள்ள உத்தரவா தம் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஆண் டுக்கு மூன்று லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு மட்டுமின்றி, உறுப்பு மாற்று சிகிச்சை போன்றவை அரசு செலுத்தும் ரூ. 6,000 பிரீமியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மெடிசெப் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே முதல மைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிக பிரீமியம் செலுத்தினாலும் குறைந்த பலன்களை வழங்குவதாகும் தற்போதைய உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களின் பொது வான நிலை. இப்போது செலுத்தும் பிரீமி யத்தின் மூன்று மடங்கு தொகையை செலுத்தி னாலும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்காத பலன்கள் மெடிசெப் திட்டத்தின் உறுப்பினர்களுக்கு கிடைக்கின்றன. இது அரசின் திட்டம் என்பதால் தான் சாத்தியமாகி றது. ஒரு குழு காப்பீட்டுத் திட்டம் குறைந்த பிரீமியத்தில் ஒப்பிடமுடியாத பலன்களை வழங்குகிறது.
மெடிசெப்பில் உறுப்பினரா வதற்கு வயது அல்லது உடல்நலக் கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை என்பதும் முக்கியம். தனியார் காப்பீட்டில்... தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்க ளில் சேருவதற்கு வயது முக்கிய அளவு கோலாகும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக சேர அதிக பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த வயதிற்கு மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக சேருவதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சிகிச்சையில் இருக்கும் அல்லது கடந்த காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற்ற ஒரு வர் திட்டத்தில் சேர்ந்தால், இந்த நோய் களுக்கான சிகிச்சை மறுக்கப்படும். தனி யார் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுப் பயன்களில் இருந்து ஒரு நபரை எவ்வாறு விலக்குவது என்பதில் கவனம் செலுத்து கின்றன. மெடிசெப்பில் 90 வயது ஓய்வூதியம் பெறு வோரும் 20 வயதுடைய பணியாளரும் மாதம் ரூ.500க்கான பிரீமியத்தில் மருத்துவப் பரி சோதனைக்கு முந்தைய செலவுகள் தவிர்த்து, சிகிச்சை பெறுகின்றனர். திட்ட பிரீமியமான 6000 ரூபாயில் 336 ரூபாயை அரசாங்கம் பறித்துக்கொள்வ தாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படு கிறது. இந்த கூடுதல் தொகை மெடிசெப்-இன் ஒரு பகுதியாக அரசாங்கத்தால் உருவாக்கப் பட்ட சிறப்பு நிதிக்கு (கார்பஸ் நிதி) செல்கி றது. இந்த நிதியைப் பயன்படுத்தி 12 வித மான கடும் நோய்களுக்கான கூடுதல் பாது காப்பு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் உறுதி செய் யப்படுகிறது என்றும் முதல்வர் கூறினார்.