மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க தங்கம் மற்றும் வெள்ளி உருக்கு ஆலைகளுக்கு எதிராக எச்ச ரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது மும்பை மாநக ராட்சி நிர்வாகம்.
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்திற்குட்பட்ட இடங்களில் 3.6 ரிக்டர் அளவில் புதனன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 14 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் விவ காரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மக்களவை நெறிமுறைக்குழு உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தகவல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே கோட்டத்தில், ரயில் டிக்கெட் சரிபார்ப்பு பணி யின் போது ஒரே நாளில் ரூ.24.5 லட்சம் அப ராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 3,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டம் ஹரி கேபட்டன் டவுன் அருகே உள்ள துங் கிரா மத்தைச் சேர்ந்த இக்பால் சிங், அவரது மனைவி லக்விந்தர் கவுர், மனைவியின் சகோதரி சீதா கவுர் ஆகியோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலை யில் பிணமாகக் கிடந்தனர். போலீசார் விசார ணையில் இக்பால் சிங் வீட்டில் வேலை செய்த வேலைக்காரன்தான் 3 பேரை கொலை செய்த தாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் பாஜக கூட்டணியுடன் விலகி தெலுங்கு தேசம் உடன் கூட்டணி அமைத் துள்ளதாக கூறிய நடிகரும், ஜனசேனா கட்சி யின் தலைவருமான பவன் கல்யாண் தெலுங் கானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கை கோர்த்துள்ளார். பாஜக கூட்டணியில் பவன் கல்யா ணின் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தெலுங்கானாவில் நவம்பர் 30 அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபர் 9 அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலை யில், மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.177 கோடி ரொக்கப் பணம், ரூ.178 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைரம் ரூ.66 கோடி மதிப்புள்ள மது பானங்கள், ரூ.30 கோடி மதிப்புள்ள மருந்துகள், ரூ.66 கோடி மதிப்புள்ள அன்பளிப்புப் பொருட்கள் என மொத்தம் ரூ.518 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.