கிழக்கு கோதாவரி, (ஆந்திரப்பிரதேசம்) ஜூலை 30- கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் துர்க்கை அம்மன் கோவில் அடித்து செல்லப்பட்டது. ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி உட்பட கோதாவரி மாவட்டங்களில் பருவ மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படு வது வழக்கம். இதனால், அந்தப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். இந்த நிலை யில், கோதாவரி ஆற்றில் சமீபத்தில் பெய்த கனமழை யால் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு உள்ளது. இதில் சீதா நகரம் மண்டலத்திற்கு உட்பட்ட புருஷோத்தம்பட்டி னத்தில் ஆற்றங்கரை யோரம் அமைக்கப்பட்டி ருந்த துர்க்கை அம்மன் கோ வில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கோவிலை வெள்ளம் இழுத்துச் செல் லப்போகிறது என்பதை உணர்ந்த கோவில் நிர்வா கம் சாமி கும்பிட வந்த யாரை யும் கோவில் பக்கம் செல்ல அனுமதிக்கவில்லை.