states

img

மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திக் கொள்ளுங்கள்

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை, நவ. 19 - எல்ஐசி இந்தியாவின் அதிகா ரப்பூர்வ வலைத்தளத்தின் முதன்மை மொழி இந்தியாக மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். www.licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஆங்கிலமாக இருந்த நிலையில், திடீரென்று இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. மொழி மாற்றத்துக்கான மெனுவும் இந்தியிலேயே இடம்பெற்றுள்ளது. இதனால், இந்தி தெரியாத வாடிக்கை யாளர்கள் வலைதளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எல்ஐசி இந்தியா வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள னர். இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திரு ப்பதாவது: “எல்ஐசி இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப் பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்று வதற்கான தெரிவும் கூட இந்தியில் தான் உள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக் கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல. இந்தியர்கள் அனைவரின் ஆதர வோடும் வளர்ந்ததுதான் எல்ஐசி.  அத்தகைய நிறுவனம் தனது வளர்ச்சி க்குப் பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி வஞ்சிக்கத் துணியலாமா? உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திப் பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டா லின் குறிப்பிட்டுள்ளார்.