states

‘0’ கட் ஆப்: கட்டணக் கொள்ளைக்கு வழி வகுக்கும் ஏமாற்று அறிவிப்பு

முதுநிலை மருத்துவ மாணவர்க ளுக்கான சேர்க்கையில் கட் ஆப் மார்க் பூஜ்ஜியமாக தீர்மானித்திருப்பது நீட் தேர்வின் தோல்வியை காட்டுகிறது என்று இந்திய மாணவர் சங்க  தமிழ்நாடு மாநில குழு  குற்றம் சாட்டியுள்ளது.  அதன் அறிக்கை வருமாறு: இந்தியா முழுவதும் ஒரே வகையான மருத் துவச் சேர்க்கையை நடத்துவதற்காகவும், மருத்துவச் சேர்க்கையில் நடைபெறும் கட்ட ணக் கொள்ளையை தடுக்கப் போவதாகவும் கூறி 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங் கம் மருத்துவ மாணவர்களுக்கு தகுதி தேர்வை தீர்மானித்தது. இத்தேர்வினை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்த்த போதி லும் தனது எதேச்சதிகாரத்தை பயன்படுத்தி நீட் தேர்வை இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்தி வருகிறது.  குறிப்பாக இந்த நீட் தேர்வின் காரணமாக தமிழகத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட மாண வர்கள் தற்கொலை செய்து இறந்து போன நிலை யில் இதுவரை ஒன்றிய அரசாங்கம் இது குறித்து  கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் தமிழக அரசாங்கம் நீட் தேர்வுக்கு எதிராக மருத் துவ மாணவர் சேர்க்கையில் மாநிலத்திற்கான ஒதுக்கீட்டில் மேல்நிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வின் அடிப்படையில் நிரப்பி கொள்வ தற்கான மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ள நிலை யில் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய  அரசு தமிழகத்தை வஞ்சித்தும் வருகிறது.  இந்நிலையில், தற்போது முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான மூன்றாவது கலந்தாய்விற்கு கட் -ஆப் மார்க் ஆக பூஜ்ஜி யத்தை தீர்மானித்துள்ளது நீட் தேர்வின் தோல்வியையே காட்டுகிறது. 

பர்சன்டைல் மெத்தட்

ஏற்கனவே இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பர்சன்டைல் மெத்தட் என்ற முறையில் ஓரளவு தேர்ச்சி அடைந்த மாண வர்கள் கூட குறிப்பாக உயிரியல் தேர்வு தாளில் பூஜியம் எடுத்திருந்தால் கூட மொத்த மதிப்பெண் தீர்மானிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்களுக்குள் வந்தால் மட்டும் போது மானது. பல லட்சம் ரூபாய்களை செலுத்தி தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளை பெறும் நிலையில் உள்ளது.  இதனால் நீட் தகுதி தேர்வில் கூடுதல் மதிப் பெண் எடுத்தும் அரசு ஒதுக்கீடு அளவிற்கு மதிப்பெண் பெற முடியாத நிலையில் பணம் கட்ட இயலாமல் பல ஏழை, எளிய நடுத்தர மாணவர்களின் கனவு நனவாகி போகிறது. பல மாணவர்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குறிப்பாக இந்தாண்டு போட்டி்தேர்வுக்கு பெயர்பெற்ற ராஜஸ்தான் கோட்டா மாவட்டத்தில் மட்டும் மொத்தம் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து இறந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதுநிலை மருத்துவ மாண வர்களுக்கு மூன்றாம் கலந்தாய்வில் குறைந்த பட்ச கட்ஆப் மார்க் என பூஜ்ஜியத்தை தீர்மா னித்திருப்பது முழுக்க முழுக்க வியாபாரம் செய்வதற்கான நோக்கமே அன்றி வேறல்ல. எனவே மருத்துவக் கல்லூரி முதுநிலை சேர்க்கையில் கொடூரமான கட்டணக் கொள்ளை நடத்துவதற்கு ஒன்றிய அரசே வழி  வகுக்கும் இத்தகைய ஏமாற்று அறிவிப்பு களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சங்கத்தின் தலைவர்  கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளனர்.