states

நெருக்கடிக்குத் தயாராகுங்கள்

பாரீஸ், ஏப்.23- பல ஐரோப்பிய நாடுகளில் நுகர்வோ ரின் நம்பிக்கை தகர்ந்திருப்பதாக பிரான்சின் நிதியமைச்சர் புருனோ லி மய்ரே தெரி வித்துள்ளார். பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடு களுக்கு இடையில் நிகழ்ந்து வரும் மோத லால் எரிபொருள் மற்றும் பல அத்தியா வசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. மாற்று வழியாக எரிபொருள் தர முன்வந்த அமெரிக்காவோ, தற்போதைய விலையை விட அதிக விலையில்தான் தர முடியும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. இந்நிலையில்தான், 2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை நிலைமை இப்படித் ்தான் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறும் புருனோ, ஐரோப்பிய மக்கள் இந்த நெருக்கடியைச் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.

எரிபொருள் கிடைக்க மாற்று வழியை 2023 ஆம் ஆண்டில்தான் ஏற்பாடு செய்ய முடியும். தேவைகளையும், இருப்பையும் சமநிலைப்படுத்திவிட முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும். ஒரு புதிய பணவீக்க நிலைமை உருவாகி இருக்கிறது என்று குறிப்பிட்டார். பிரான்சின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு  செய்வதற்கான முதல் கட்டத் தேர்தல் நிறைவு பெற்று, இரண்டாம் கட்டத் தேர்தல் ஞாயிறன்று (ஏப்ரல் 24) நடைபெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மானுவல் மக்ரோன் மற்றும் அதிதீவிர வலதுசாரி வேட்பாளரான லீ பென் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தல் பிரச்சாரத்திலும் விலைவாசி உயர்வுப் பிரச்சனை முக்கியமான பேசுபொருளாக இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதால், அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை வலதுசாரி வேட்பாளர் பேசி வருகிறார். பிரான்சில் மட்டுமல்லாமல் பாதிப்பு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் என்று புருனோ எச்சரிக்கிறார். கடு மையான விலை உயர்வால் பிரிட்டனில் சில்லரை விற்பனை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறது. பணவீக்கத்தை சமாளிக்கும் முடிவுகளை எடுப்பதா அல்லது சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதா என்பது பெரும் சவாலாக எழுந்து நிற்கிறது.