states

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த தீர்ப்புக்கு மாதர் சங்கம் வரவேற்பு

சென்னை,பிப்.14-  பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன் னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு  மூன்றாண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில்  சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு இருந் தார். அந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி.யை பாதுகாப்பு ஆலோச னை என்ற பெயரில் தன் காரில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்  செய்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழக உள்துறை செயலாளர் மற்றும்  அப்போதைய டிஜிபி திரிபாதி ஆகியோரி டம் புகார் அளித்தார். புகார் அடிப்படை யில் டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். புகார் கொடுக்க சென்னை நோக்கி  சென்றபோது செங்கல்பட்டு டோல்கேட்டில் பெண் எஸ்.பி.யின் காரை மறித்து வாக்குவாதம் செய்து புகார் கொடுக்க  செல்லக்கூடாது என  மிரட்டி காரின் சாவியை பறித்த செங்கல் பட்டு எஸ்.பி. கண்ணன் மீது நான்கு பிரிவுகளில் விழுப்புரம் சிபிசிஐடி போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. ராஜேஷ் தாஸ் மீது  நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் போலீஸ் எஸ்.பி.கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து  2023 ஏப் ரல் 13-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.  இத்தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என இருவரும் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை யின் அடிப்படையில் 12.2.2024 மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். 

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  மாநி லக்குழு கூட்டம் நடந்தது. அப்போது பாலியல் புகார் எழுந்த உடனேயே கோவை எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி யது. சென்னையில் டிஜிபி அலுவல கத்திற்கு முன்பு மனு கொடுத்து   முற்று கை போராட்டத்தை  நடத்தியது. தமிழ் நாட்டில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங் கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பத்தி ரிக்கை செய்திகளும் பத்திரிகையா ளர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டன. சென்னை வள்ளுவர் கோட்டத் தில் ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண் ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாநிலக் குழுவின் சார்பி லும் ஒரு   ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இப்படிப்பட்ட போராட்டங்கள் தொட ர்ந்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.    காவல்துறையில் பணிபுரியக் கூடிய பல எஸ்பியும் அதேபோல காவல்துறையைச் சார்ந்தவர்கள் , காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண் காவலர்கள் பெண் எஸ்.பி.  பெண் டிஎஸ்பி உள்பட பல உயர் பொறுப்பில் இருந்தாலும்  அவர்களு க்கு மேல் அதிகாரிகளால் இப்படிப் பட்ட பாலியல் தொல்லைகள் நடை பெறுவது என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கண்காணித்து காவல்துறையில் இருக்கக்கூடிய அதி காரிகளுக்கு பாலியல் நிகழ்நிலை பயிற்சி கொடுப்பதும் பாலியல் புகார்  வரும்போது உடனடியாக நடவடிக்கை களை மேற்கொள்வதும் இன்றைய தேவை என அனைத்தையும் ஜன நாயக மாதர் சங்கம் கருதுகிறது. உடனடியாக அனைத்து காவல் நிலை யங்களிலும் உள் புகார் குழு அமை ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.