ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவரு மான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் எடுக்க தெலுங்கு தேசம் கடு மையாகப் போராடி வரு கிறது. ஒன்றிய பாஜக அரசிடம்முறையிட் டும் பலனளிக்கா மல் சந்திரபாபு நாயுடு ஒன்றரை மாத கால மாக ராஜமுந்திரி சிறையில் உள்ளார். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை விடுவிக்கக் கோரியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான “இந்தியா” கூட்டணியில் சேருமாறும் தெலுங்கு தேசம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பும் விடுத்துள் ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த 2 கோரிக் கையால் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தேசம் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
பாஜக கூட்டணி பற்றி பேசவில்லை
சந்திரபாபு நாயுடு கைது செய்யப் பட்ட பொழுது தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இணையும் என தக வல்கள் வெளியாகின. ஆனால் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்து திடீரென விலகி, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட் டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறி வித்தார். பவன் கல்யாணின் கூட்டணி அறி விப்பை ஏற்றுகொண்ட தெலுங்கு தேசம், பாஜக கூட்டணி தொடர்பான முடிவை பற்றி பேசாமலேயே இருந்தது. கருத்து தெரிவிக்காமலேயே இருந்தது. இதனால் விரைவில் “இந்தியா” கூட்டணியில் தெலுங்கு தேசம் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளன.