states

ஹில் நிறுவனத்தின் கேரளா, பஞ்சாப் அலகுகளை மூடுகிறது ஒன்றிய அரசு

களமசேரி, பிப். 27- ஹிந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ்  லிமிடெட் (ஹில்) நிறுவனத்தின் கேரளா மற்றும் பஞ்சாப் அலகுகளை மூடு கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் இது தொடர்பான கடிதத்தை ஹில் சிஎம்டிக்கு அனுப்பியது. கேரளாவின் ஏலூர் உத்யோக் மண்டல் மற்றும் பஞ்சாபில் பதிண்டா  ஆகிய இடங்களில் உள்ள அலகு களை மூடிவிட்டு மும்பை ரசாயன  அலகை தக்கவைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. ரசாயனப் பிரிவை  மூடுவதன் பகுதியாக உத்யோக் மண்டல் மற்றும் பதிண்டாவில் உள்ள அலகுகளில் இருந்து இயந்திர பாகங்களை கொண்டு செல்ல நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, பஞ்சாப் மாநிலங் களில் உள்ள யூனிட்களை மூடிவிட்டு, பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் அந்த அலகை தக்கவைக்க ஒன்றிய நடவடிக்கை எடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது. அலகுகள் மூடப்பட்ட பின்னர், ஊழியர்களை பணியமர்த்துவது மற்றும் நிறுவனத்தின் பொறுப்பு கள் குறித்து விரிவான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு உரிய நேரத்தில் நிதி வழங்காத தால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன் மூலம் நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. உத்யோக்மண்டலின் மூன்று பிரிவு களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

3 அலகுகள்; 70 ஊழியர்கள்

தென்னிந்தியாவில் மலேரியா  பரவுவதைத் தடுக்க DDTT (பூச்சிக்கொல்லி மருந்து) தயாரிக்க ஏலூர் உத்யோக் மண்டலில் மாநில  அரசு வழங்கிய 33 ஏக்கர் நிலத்தில் 1954 ஆம் ஆண்டு இந்த ஹில் நிறு வப்பட்டது. பின்னர், எண்டோசல் பான் மற்றும் பிஎம்சி ஆகியவையும் தயாரிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக பென்சீன் மற்றும் குளோரின் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி 1996 இல் முடிவடைந்தது. எண்டோ சல்பான் உற்பத்தி 2011 இல் மற்றும் டிடிற்றி உற்பத்தி 2018 இல் முடிவடைந்தது. தயாரிப்பு பல்வகைப்படுத்தலின் ஒரு பகுதியாக 2018-இல் பெயர்  ஹில் (இந்தியா) என மாற்றப் பட்டது. பின்னர், ஆர்கானிக் பொருட் களுக்கு மாறினர். தற்போது உத்யோக் மண்டல் பிரிவில் மூன்று ஆலைகள் உள்ளன. நிர்வாகத் துறை உட்பட 64 நிரந்தர ஊழியர்களும், ஆறு ஒப்பந்தத் தொழிலாளர்களும் உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்த ஏழு பேருக்கு சம்பள பாக்கி வழங்கப்படவில்லை.

அடுத்து என்ன?

இந்நிறுவனம் தனது செயல்பாடு களை முடித்தவுடன் நிலத்தை தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட விலையில் மாநில அரசிடம் ஒப்படை க்க வேண்டும் என்பது நிபந்தனை. உத்யோக்மண்டலம் தவிர, படாலா வில் உள்ள எச்ஐஎல் காலனி பகுதி யில் 13.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 8 ஏக்கரை அந்நிறுவனமும், 5.5 ஏக்கரை மாநில அரசும் குத்தகைக்கு எடுத்தது. உத்யோக்மண்டல் பிரிவு குறித்து நிர்வாகம் இறுதி முடிவு எடுக்கும்போது மாநில அரசு தலை யிடும் என ஊழியர்கள் நம்புகின்றனர்.

ஒன்றிய அரசு மூடியதை கேரளா திறந்தது

தனியார்மயமாக்கல் காரணமாக ஒன்றிய அரசு அடிமாட்டு விலைக்கு விற்க முடிவு செய்த வேளுர் ஹிந்துஸ் தான் செய்தித்தாள் நிறுவனத்தை கேரள அரசு ஏலத்தில் கையகப்படுத்தி யது. “கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட்” என்ற பெயரில் மே 19  அன்று முதல் ரீல் பேப்பர் உற்பத்தி செய்யத் தொடங்கியது. உற்பத்தி துவங்கிய மூன்று மாதங்களில், தென்னிந்தியாவில் உள்ள ‘தி இந்து’ உள்ளிட்ட 12 நாளிதழ்களுக்கு அச்சு  காகிதம் விநியோகம் செய்து வரு கிறது. இதுபோல் மூடப்பட்டு மூன்று  ஆண்டுகளுக்குப் பிறகு விற் பனைக்கு வந்தது காசர்கோடு பெல் இ.எம்.எல் நிறுவனம். அதையும் ஒன்றிய அரசிடம் இருந்து கையகப் படுத்தியது கேரளம். இது கெல் எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் லிமிட்டெட் (கெல்-இஎம்எல்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஓராண்டு நிறைவடை யும் முன்பே 10 கோடி ரூபாய்க்கான வேலைகளை பெற்றுள்ளது. இந்நிறு வனத்துக்கு வெளிநாட்டில் இருந்து 1.25 கோடி ரூபாய்க்கான வேலை உத்தரவுகளும் கிடைத்துள்ளன. அரசு நிலம் பாதுகாக்கப்படும் மாநில அரசுக்கு உரிமையுள்ள நிலத்தை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். ஹில் இந்தியா வசம் உள்ள நிலத்தின் தற்போதைய நிலை மற்றும் இதர  விவரங்களை அளிக்குமாறு மாவட்ட  நிர்வாகத்திடம் தொழில் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அந்த  நிலத்தை எவ்வாறான தேவை களுக்கு பயன்படுத்த முடியும் என ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.