சென்னை, மே 15- வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்து வர்களின் ஊதியக் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உண்ணாநிலை போராட் டத்தை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு ஒத்திவைத்துள்ளது. மாநில அரசுக்கு நிதி நெருக்கடியாக இருந்தாலும், உயிர்காக்கும் துறை என்ற வகையில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்து வம் கொடுத்து, பல்வேறு திட்டங்களுக்காக, முதல்வர் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்கி றார்கள். இருப்பினும் இங்கு ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற போராடி வரும் மருத் துவர்களுக்கு, உரிய ஊதியம் மறுக்கப்படு வது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பது முதல்வருக்கு தெரியும். தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து இங்கு அநீதி இழைக்கப்படுவதை நம் முதல்வர் நிச்சயம் விரும்பமாட்டார்கள் என்று நம்புகிறோம். அதுவும் அரசு மருத்துவர்க ளின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 300 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. எனவே வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளையொட்டி, பிறந்த நாள் பரிசாக, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை முதல்வர் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில், ஏற்க னவே அறிவிக்கப்பட்ட மே 18 உண்ணா நிலைப் போராட்டத்தை, ஜூன் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு அறிவித்துள்ளது.