புதுதில்லி, ஜன. 24 - மீனவர்கள் சுருக்குமடி வலை களை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுருக்குமடி வலைகளைப் பயன் படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது. சுருக்குமடி வலை களைப் பயன்படுத்துவதால் கடல் வளம், மீன்களின் இனப்பெருக்கம், பவளப் பாறைகள் பாதிக்கப்படுகிறது என்று அரசு கூறியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த கட்டுப்பாட்டுக்கு இடைக் காலத் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அர சானது கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க அனுமதி வழங்கியிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்தது. அத்துடன் தமிழ்நாடு அரசின் சுருக்குமடி வலை மூலமான மீன்பிடிப்புக்கான தடை செல்லும் என தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மனுதாரர் ஞானவேல் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்த னர். இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்கி, சஞ்சய் ஹெக்டே ஆஜராகி வாதிட்டனர். மனுதாரர் சார்பில் வாதிடுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சுருக்குமடி மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டது சட்டவிரோதம். கடலில் 12 கடல்மைல் தொலைவைத் தாண்டி மீன்பிடிக்க அனுமதி இருக் கிறது. ஆனால் அங்கே மீன்பிடித்தா லும் கூட அரசுத் தரப்பு நடவடிக்கை எடுக்கிறது; சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்கிறது. ஆகையால் தான் 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்; சுருக்குமடி மீன்பிடித்தலுக் கான தடையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் செவ்வாயன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், திங்கள்கிழமை மற்றும் வியா ழக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என அனுமதி வழங்கி உள்ளது. மேலும் 12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மீன்வளத்துறையில் பதிவு செய்யப் பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.