states

செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதியில் பிரக்ஞானந்தா அதிர்ச்சி

இணையம் வழியாக நடைபெற்ற செஸ் உலகில் முதன்மையான தொடரான செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின்  நம்பிக்கை நட்சத்திரமும், தமிழ்நாட்டின் இளம்வீரரான பிரக்ஞானந்தா - சீனாவின் டிங் லிரெனை எதிர்கொண்டார். வியாழனன்று நடைபெற்ற இறுதி சுற்றின் தொடக்க ஆட்டம் சமனில் (1-1) நிறைவடைந்த நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் டை-பிரேக்கர் சுற்று வெள்ளியன்று நடைபெற்றது. டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா செய்த சிறிய தவறை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சீனாவின் டிங் லிரென் வெற்றி பெற்று சாம்பியன் பட்டதைச் தட்டிச் சென்றார். இறுதிவரை கடுமையாக போராடி ஒரே ஒரு தவறால் பட்டத்தை இழந்த தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா 2-ஆம் பரிசு வென்றார். 2-ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா பரிசாக ரூ.11 லட்சம்  வென்றுள்ளார்.

 

;