states

திண்டுக்கல் : சின்னாளபட்டியில் சர்வீஸ் சாலை அமைக்க களஆய்வு

சின்னாளபட்டி, ஜூன் 5- மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டிக்கு வரும் வழியில் சர்வீஸ் சாலை அமைப்பது மற்றும் காமலாபுரம் பிரிவு, பெருமாள்கோவில்பட்டி, அம்பாத் துரை பிரிவு, கலிக்கம்பட்டி  பகுதிக ளில் அணுகு சாலை அமைப்பது குறித்தும் திண்டுக்கல் தொகுதி மக்க ளவை உறுப்பினர் ப.வேலுச்சாமி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளு டன் சென்று  திங்களன்று ஆய்வு நடத்தினார். திண்டுக்கல்லில் இருந்து மதுரை க்கு வரும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி பிரிவு அருகே (பைபாஸ்) தேசிய நான்கு வழிச் ்சாலை நிர்வாகம் சார்பாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல்லில் இருந்து சின்னா ளபட்டிக்கு வரும் மக்களும், மதுரை யில் இருந்து திண்டுக்கல் செல்லும் மக்களும் நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலையுடன் அமைக்கப்பட்ட குறுக்குப்பாதையைப் பயன்படுத்தி வந்தனர். அம்பாத்துரை காவல்துறை அதிகாரிகள் அதிக விபத்து நடப்ப தாக கூறி குறுக்குப்பாதையை அடைத்து விட்டனர். இதனால் சின்னாளபட்டியில் இருந்து காந்திகிரா மம் செல்பவர்கள் ஐந்து கி.மீட்டர் தூரம் கூடுதலாக பயணித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருகிறது.  இந்த நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ப.வேலுச்சாமி 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சின்னாள பட்டி வந்தபோது மக்கள் புற வழிச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உடனடி யாக சின்னாளபட்டி புறவழிச்சாலை பகுதிக்கு வந்த மக்களவை உறுப்பி னர் வேலுச்சாமி அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கை களை கேட்டபின்பு திண்டுக்கல்லின் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை அழைத்துப் பேசினார். மேலும் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ள இடங்க ளை அவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர்.

பின்னர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை அழைத்து பேசிய மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி இப்பகுதியில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சர்வீஸ் சாலை அமைத்துக் கொடுப்பதோடு, தொகுதி மேம்பாட்டு  நிதியில் உயர் மின் கோபுர விளக்கும், சிக்னல்களும் பொருத்தி தருகிறேன் என்று உறுதி யளித்தார். இந்நிலையில் சர்வீஸ் சாலைகளுக்கான பணிகள் கடந்த  பத்து மாதங்களாக தொடங்கப்பட வில்லை. இந்த நிலையில்  கடந்த மாதம் செட்டியபட்டியில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி-யிடம்  சின்னாளபட்டி புறவழிச் சாலை அருகே சர்வீஸ் சாலை அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்தனர். 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் திற்குப் பின் தற்போது களஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், மாவட்டக் கவுன்சிலர் பத்மாவதி, சின்னாளபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், பேரூராட்சிமன்ற தலைவர் பிரதீபா, துணைத்தலைவர் ஆனந்தி, ஊராட்சி மன்றதலைவர்கள் செட்டியபட்டி ராஜா, தொப்பம்பட்டி கருப்பையா, வார்டு உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.