சென்னை, மே 19- ஒன்றிய அரசால், அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு, மாநில அரசின் வரைவு விதிகள் குறித்து தொழிற் சங்கங்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இது குறித்த விபரம் வருமாறு:- தொழில் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு விதிகளின் முக்கியமான அம்சங்களை விளக்கி பேசுவதற்கு தொழிலக பாதுகாப்பு அதிகாரி ஜெக தீசன் விடுத்த அழைப்பின்பேரில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியூ, தொமுச உட்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழகத்திலுள்ள 10 தொழிலாளர் விதிகளை இணைத்து ஒரே தொகுப்பாக மாற்றப்பட்டுள்ளது. தொழில் பாது காப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமை கள் விதிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதிதாக கொண்டு வரவிருக்கும் இந்த விதியை தமிழாக்கம் செய்து தர வேண்டும் என்றும் வரைவு நகல் ஏப்ரல் 11 அன்று வெளியிட்டதன் அடிப்படையில் திருத்தம் கொடுப் பதற்கு 45 நாட்கள் அவகாசம் வழங்கப் படும் என்ற அரசின் விதியை தமிழில் சட்ட வரைவு கொடுத்த பின்னர் 45 நாட் கள் அவகாசம் என திருத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத் தின. மேலும், இந்த விவகாரத்தில் அரசு இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, மீண்டும் இதே போன்று தொழிற்சங்கங் களின் கூட்டத்தை நடத்தி ஏற்றுக்கொள் ளப்பட்ட விஷயங்கள் குறித்து அல்லது நிராகரிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு இயக்குநர் பதில் அளிக்கையில் இது போன்ற கூட்டங்கள் மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் நடத்தப்படும் என்றார். இந்த கூட்டத்தில் தொமுச பேரவைத் தலைவர் நடராஜன் பேச்சிமுத்து, சிஐடியு தலைவர்கள் கே. விஜயன், ரமேஷ் சுந்தர் அரவிந்த், ஏஐயுடிசி சார்பில் டி.எம். மூர்த்தி, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு தரப்பில் இயக்குநர் ஜெகதீசன், சரவணன் இணை இயக்குநர், கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போன்று ஆலை உரிமையாளர்களுக்கான கூட்டம் மே 13 அன்று நடைபெற்றுள் ளது.