நீலகிரி,ஏப்.28- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நீலகிரி கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. 200 பேரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலை யில் அவரது சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்றது. கொடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனைச் சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் கொடநாடு வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி சுரேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள் ளார். அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட குற்றபிரிவு டிஎஸ்பி சந்திரசேகர், குன்னூர் டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.