சென்னை,ஏப்.15- கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பானது வன உரிமைச்சட்டத்திற்கு எதிரானது. எனவே மேய்ச்சல் உரிமையை பாதுகாக்க தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தமிழக முத லமைச்சருக்கும் தலைமைச் செயலாள ருக்கும் அனுப்பிய மனு வருமாறு: சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை WP (M.P) (MD) No.8466 of 2022 மற்றும் WP.M.(MD) No.7852 of 2020 இந்த வழக்கில் 04.03.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. மனுதாரர் ஜி.திருமுருகன் என்பவர் தேனி மாவட்ட மேகமலை வனச்சரகத்திற்குள் மலைமாடு கள் மேய்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், நீதிபதிகள் வனப்பகுதி க்குள் கால்நடைகள் மேய்க்க மாநிலம் முழுவதும் தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த வுடன் தீர்ப்பை மாற்றுவதாக அறிவித்து 17.03.2022 அன்று புதிய உத்தரவை பிறப்பித்த னர். இந்த புதிய உத்தரவில் புலிகள் சரணால யம், வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் மேய்ச்ச லுக்கு தடை விதித்துள்ளனர். இதர வனப் பகுதிகளில் தமிழ்நாடு வனச்சட்டம் விதி களுக்கு உட்பட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அளித்த தீர்ப்பிற்கும் மாற்றி யமைக்கப்பட்ட தீர்ப்பிற்கும் மக்களை பொறுத்தவரை பெரிய வித்தியாசமில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். வன வளங்களை வளர்த்தெடுப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த கால்நடை கள் அவசியம். பல லட்சக்கணக்கான மக்க ளின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. பால் உற்பத்தியிலும் கடும் சரிவு ஏற்படும். நாட்டுமாடு உற்பத்தி, ஜல்லிக் கட்டு காளைகள் வளர்ப்பு இவை அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும். ஆடு, மாடுகளை அரை நாடோடியாக அலைந்து மேய்த்து வாழ்ந்து வரும் பல்லாயிரக் கணக்கான கீதாரிகள் வாழ்விழந்து கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தீர்ப்பினால் ஏற்பட இருக்கும் இத்தனை பாதிப்புக்கள் ஒருபுறமிருந்தாலும், ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் பிற சமூகத்தினருக்கு காடுகள் மீதான உரிமை கள் அங்கீகரிக்கும் சட்டம்- 2006 மேய்ச்சல் உரி மையை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் இந்த சட்டம் கவ னத்தில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து அரசே, மேல்முறையீடு செய்து வன உரிமைச்சட்டம்- 2006 மக்களுக்கு வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பை உறுதிப்படுத்தவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனத்துறையினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்பொழுதே கால்நடை மேய்ச்சலை தடை செய்வதுடன், லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிக்கும் நட வடிக்கை துவங்கிவிட்டது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் ஆதிவாசி மக்களிடம் இத்தகைய செயலில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, தாமதமில்லாமல் அவசர உணர்வுடன் நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.