states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக் ராஜி னாமா செய்த நிலையில், இணை நிர்வாக இயக்கு னரான தீபக் குப்தா வரும் டிசம்பர் 31 வரை  நிர்வாக  அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை கவனிப்பார் என கோடக் மஹிந்திரா அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மண்ணடி பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 டன் எடை கொண்ட தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாட்டின் தலைநகர் பிரதேசமான தில்லி யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட மேற்கு தில்லி பகுதியான ஜுக்கியில் தனியாக வசித்து வந்த 85 வயதான மூதாட்டியை வெள்ளியன்று அதிகாலை 28 வயதுமிக்க இளைஞர் பிளேடால் தாக்கி பாலியல் பலாத்காரம்  செய்துள்ளார். கழுத்து பகுதியில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படை யில் ஆகாஷ் என்ற இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். .

பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற  1500 பழங்குடியினர் குடும்பங்க ளுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஒடிசா பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட ரயில்வே அதி காரிகள் அருண்குமார் மஹந்தா, அமீர்கான், பப்பு குமார் ஆகிய 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புழல் சிறையில்  சிறை வார்டன் தாக்கியதால் காயமடைந்த நைஜீரியாவைச் சேர்ந்த 3 கைதி களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அதற்கான ஏற்பாடு களை செய்து தரவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் ஆட்சி பகுதியான ஹாங்காங்கை மிரட்டி வரும் சாவோலா சூறாவளி காரணமாக  அங்கு இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக 450 விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.