சென்னை, ஏப்.19- அரசு ஊழியர்கள் , ஆசிரி யர்களின் கோரிக்கைகளை, திமுக தேர்தல் அறிக்கை வாக்கு றுதியை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலி யுறுத்தி இன்று (ஏப்ரல் 20) தமி ழகம் முழுவதும் அனைத்து வட்டக்கிளைகளிலும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித் துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போராடிப் பெற்ற பல்வேறு உரி மைகள் கடந்த 10 ஆண்டு அதி முக ஆட்சிக் காலத்தில் பறிக்கப் பட்டன. 2021 டிசம்பர் 18,19 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் தமி ழக முதல்வர் கலந்து கொண்டு அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தங்களது தலைமையிலான அரசு நிறைவேற்றித் தரும் என்று கூறி, நம்பிக்கை அளித்தார்.
எனவே, புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய் வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத் தில் ஒருவருக்கு நிபந்தனை யின்றி கருணை அடிப்படை பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து வட்டக் கிளைகளிலும் ஏப்ரல் 20 புதன் கிழமையன்று தமிழக முதல்வ ரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று முதல்வ ருக்கு அனுப்பிய மனுவில் சங் கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மாநிலப் பொதுச்செய லாளர் ஆ.செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த மனுவின் நகலை தலை மைச் செயலாளருக்கும், மனித வள மேலாண்மைத்துறை செய லாளருக்கும் அனுப்பியுள்ளனர்.