states

இபிஎஸ் அணி புறக்கணிப்பு-பாஜக ஓட்டம்

சென்னை,அக்.19- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  தொடர்பாக விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் புதனன்று (அக்.19) முதல்வர் விளக்கம் அளித்தார்.  நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்த சட்டப்பேரவையில் விவாதம் நடை பெற்றது. இதில் சட்டமன்ற கட்சித் தலை வர்கள் உரையாற்றினர். இந்த விவாதம் தொடங்கியதும் சட்டமன்ற பாஜக கட்சித்  தலைவர் நயினார் நாகேந்திரன், உறுப்பினர்  காந்தி உள்ளிட்ட அனைவரும்  அவையிலிருந்து வெளியேறிவிட்டனர். பாஜகவின் இந்த நடவடிக்கை துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தியது மட்டு மல்ல, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின்  உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று போராட்டம் நடந்தபோது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிர்வாகத்திற்கு ஒன்றிய அரசும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை தமிழ்நாடு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு  என்று அறிவிக்க  முடியாமல்  நிரூபித்தனர். முன்னதாக, அதிமுகவில் இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக பேரவை நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.